எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

கடவுள்கள் இங்கே! கோயில்கள் எங்கே? எங்கே? எங்கே?[+யூடியூப் காணொலி]

‘பாரத்’இல் கடவுள்களே மனிதர்களாக அவதரிப்பதுண்டு. அதனால்தான் இது புண்ணியப் பாரதம்.


அண்மைக் காலத்தில் இங்கு அவதரித்த இரு கடவுள்களில் ஒருவர் மோடி[கடவுளால் அனுப்பப்பட்ட கடவுள்]; மற்றொருவர் ஜக்கி வாசுதேவ்[கடவுள்களின் குருவான கடவுள்].


இங்கே, கண்களால் காண இயலாத  கடவுள்களுக்குத்தான்[சிலைகள்] கோயில்கள்[எண்ணிலடங்காதவை] உள்ளன.


நம் கண்ணெதிரே காட்சியளித்து அருள்பாலிக்கிற இந்தத் தெய்வங்களுக்கும், இவர்கள் தங்களின் நிரந்தர இருப்பிடமான ‘பரலோகம்’ திரும்புவதற்குள் கோயில்கள் நிர்மாணிக்கப்படுதல் வேண்டும்.


அதற்கான உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவது இவர்களால் இரட்சிக்கப்படும் அனைத்து மக்களின் கடமை ஆகும்!