எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

கடவுள்கள் இங்கே! கோயில்கள் எங்கே? எங்கே? எங்கே?[+யூடியூப் காணொலி]

‘பாரத்’இல் கடவுள்களே மனிதர்களாக அவதரிப்பதுண்டு. அதனால்தான் இது புண்ணியப் பாரதம்.


அண்மைக் காலத்தில் இங்கு அவதரித்த இரு கடவுள்களில் ஒருவர் மோடி[கடவுளால் அனுப்பப்பட்ட கடவுள்]; மற்றொருவர் ஜக்கி வாசுதேவ்[கடவுள்களின் குருவான கடவுள்].


இங்கே, கண்களால் காண இயலாத  கடவுள்களுக்குத்தான்[சிலைகள்] கோயில்கள்[எண்ணிலடங்காதவை] உள்ளன.


நம் கண்ணெதிரே காட்சியளித்து அருள்பாலிக்கிற இந்தத் தெய்வங்களுக்கும், இவர்கள் தங்களின் நிரந்தர இருப்பிடமான ‘பரலோகம்’ திரும்புவதற்குள் கோயில்கள் நிர்மாணிக்கப்படுதல் வேண்டும்.


அதற்கான உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவது இவர்களால் இரட்சிக்கப்படும் அனைத்து மக்களின் கடமை ஆகும்!