எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 22 டிசம்பர், 2024

கடவுள்கள் இங்கே! கோயில்கள் எங்கே? எங்கே? எங்கே?[+யூடியூப் காணொலி]

‘பாரத்’இல் கடவுள்களே மனிதர்களாக அவதரிப்பதுண்டு. அதனால்தான் இது புண்ணியப் பாரதம்.


அண்மைக் காலத்தில் இங்கு அவதரித்த இரு கடவுள்களில் ஒருவர் மோடி[கடவுளால் அனுப்பப்பட்ட கடவுள்]; மற்றொருவர் ஜக்கி வாசுதேவ்[கடவுள்களின் குருவான கடவுள்].


இங்கே, கண்களால் காண இயலாத  கடவுள்களுக்குத்தான்[சிலைகள்] கோயில்கள்[எண்ணிலடங்காதவை] உள்ளன.


நம் கண்ணெதிரே காட்சியளித்து அருள்பாலிக்கிற இந்தத் தெய்வங்களுக்கும், இவர்கள் தங்களின் நிரந்தர இருப்பிடமான ‘பரலோகம்’ திரும்புவதற்குள் கோயில்கள் நிர்மாணிக்கப்படுதல் வேண்டும்.


அதற்கான உடனடி நடவடிக்கையில் ஈடுபடுவது இவர்களால் இரட்சிக்கப்படும் அனைத்து மக்களின் கடமை ஆகும்!