எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

திங்கள், 8 டிசம்பர், 2025

இப் பகிர்வு ‘நீதிப்பேரரசர்’ ஜி.ஆர்.சாமிநாதன் பார்வைக்குப் பணிந்தனுப்பப்படுகிறது!

மிகப் பெரும்பான்மை மக்களை[மெத்தப் படித்துச் சட்டத்திட்டங்களை அறிந்தவர்கள் உட்பட] எவ்வாறெல்லாமோ ஆட்டிப்படைத்துப் பெரும் தீங்கு விளைவிக்கும் மூடநம்பிக்கைகளை, சாமானியர்கள் சாடி எழுதினால் கண்டுகொள்வாரில்லை.

ஏதேனும் ஒரு வகையில் பிரபலமாகிப் பலராலும் அறியப்பட்டவர்கள் அவற்றைக் கண்டித்தால், அது மிக எளிதாக மக்களைச் சென்றடையும்.

நாளிதழில் வெளியான, மிகு மதிப்பிற்குரிய ஒரு முன்னாள் நீதிபதியின் இது குறித்த உரை[நகல் பதிவு] இங்கே பகிரப்படுகிறது, கணிசமான அளவிலேனும் இது முட்டாள்களைத் திருத்தும் என்னும் நம்பிக்கையுடன்.