எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 5 டிசம்பர், 2025

திருப்பரங்குன்றம்... தீர்ப்பளித்த சுவாமிநாதனும் தமிமுன் அன்சாரியின் 'அடடா' விமர்சனமும்!

//திருப்பரங்குன்றத்தில் கார்த்திகைத் தீபம் ஏற்றும் பிரச்சினையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பைக் கண்டிக்கும் வகையில், ‘விசிக எம்எல்ஏ’ தமிமுன் அன்சாரி, மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது என்றும், எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்; காவி இருக்கக் கூடாது என்றும் ‘கடுமையாக’ விமர்சித்துள்ளார்// என்கிறது ஊடகச் செய்தி*

இந்தக் கடுமையான விமர்சனத்திற்கு 'நீதிப் பேரரசர்' ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆற்றவுள்ள எதிர்வினை என்னவாக இருக்கும்?

என்னவாகவோ இருக்கட்டும். அதை அறியும் ஆர்வம் அடியேனுக்கு உள்ளது எனினும், தமிமுன் அன்சாரியின் அற்புதமான கவிநயம் மிளிரும் அந்தக் கற்கண்டு நடைத் தமிழை வெகுவாக ரசித்தேன்; மகிழ்ந்தேன்.


மீண்டும் மீண்டும் வாசித்து மகிழத் தூண்டும் அந்த வாசகம்;


“மாதவி நீதிபதியாக இருக்கும் இடத்தில் கண்ணகிக்கு நீதி கிடைக்காது. எழுதுகோலில் நீல நிற மை இருக்கலாம்! காவி இருக்கக் கூடாது.”

                                         *   *   *   *   *

*https://tamil.oneindia.com/news/madurai/tamimun-ansari-attacks-judge-gr-swaminathan-over-lamp-at-the-thiruparankundram-temple-755755.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=Deep-Links