வெள்ளி, 5 ஏப்ரல், 2024

இவர் பைத்தியமா, சித்தம் தெளிந்த தத்துவ ஞானியா?

நாமக்கல் நகரக் காவல்நிலையத்தின் எதிரே கண்ணில்பட்ட, கவனத்தை ஈர்க்கும் ஒரு  நிகழ்வை, அவசரகதியில் காணொலியாக்கிப் பதிவு செய்துள்ளேன்[முகவரி கீழே].

படப்பிடிப்பின்போது[கைபேசி], விரைந்தோடும் வாகனங்களின் இரைச்சலுக்கிடையே, “வீடியோ எடுக்கிறாங்க” என்று எவரோ எச்சரிக்கை செய்ய, நடு வீதியில் ‘கல் சாமி’ வைத்து நீர் அபிஷேகம் செய்யும் 'அரை ட்ரவுசர் ஆசாமி'யின் முறைப்பான பார்வை என் மீது ஊடுருவியபோது பயந்தேன் என்பது உண்மை.

கையில் பாட்டிலுடன் “வீடியோவா எடுக்குறே?” என்று அதட்டியவாறு அவர் என்னை நோக்கி வர.....

அடி வாங்காமல் நான் தப்பி ஓடிவந்தது என் வாழ்நாள் சாதனைகளில் ஒன்று! 

ஹி... ஹி... ஹி!!!

காணொலி முகவரி[யூடியூப்]:

https://youtube.com/shorts/A5bTla3K4OQ?si=O4JCSBbZD5po953x

பிளாக்கர்: