எனது படம்
இந்தத் தளத்தின் பதிவுகளில் இடம்பெறும் கருத்துகளும் விமர்சனங்களும் வாசிப்பாளர்களைத் திருத்துவதையோ, அவர்தம் மனங்களை நோகடிப்பதையோ நோக்கமாகக் கொண்டவை அல்ல. இவை அவர்களைச் சிந்திக்கத் தூண்டுவனவாக அமைதல் வேண்டும் என்பது என் விருப்பம். நான் பதிவுகள் எழுதுவது என் நினைவாற்றலைத் தக்கவைப்பதற்காகவும், ஓய்வு நேரத்தைப் பயனுடையதாக ஆக்குவதற்காகவும் என்பதும் அறியத்தக்கது.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

மலரல்ல அது; ஆனாலும், கசக்கிக் காலால் மிதித்தும் கமகமத்தது!!!

 தோ ஒரு பூ.

ஒரு முறை அதைக் கடந்து போனேன்;


மீண்டுவந்து 

பறித்து முகர்ந்தேன்;

சிறு சிறு துகள்களாக்

கிள்ளிக் கிள்ளித் தரையில் உதிர்த்தேன்;

காலால் மிதித்தேன்;


பொறுக்கி எடுத்து நசுக்கினேன்;


கசக்கினேன்.


என்ன செய்தும்.....


அதை முகர்ந்தபோது

கமகமத்து மணம் பரப்பியது.

பெற்ற தாயின் நினைப்பு வந்தது!

* * * * *

*** இது சுட்ட கவிதை. முகவரியைச் சேமிக்காததால் உள்மனம் சுடுகிறது!