எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2025

மலரல்ல அது; ஆனாலும், கசக்கிக் காலால் மிதித்தும் கமகமத்தது!!!

 தோ ஒரு பூ.

ஒரு முறை அதைக் கடந்து போனேன்;


மீண்டுவந்து 

பறித்து முகர்ந்தேன்;

சிறு சிறு துகள்களாக்

கிள்ளிக் கிள்ளித் தரையில் உதிர்த்தேன்;

காலால் மிதித்தேன்;


பொறுக்கி எடுத்து நசுக்கினேன்;


கசக்கினேன்.


என்ன செய்தும்.....


அதை முகர்ந்தபோது

கமகமத்து மணம் பரப்பியது.

பெற்ற தாயின் நினைப்பு வந்தது!

* * * * *

*** இது சுட்ட கவிதை. முகவரியைச் சேமிக்காததால் உள்மனம் சுடுகிறது!