வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

ஆணா, பெண்ணா? விரும்பிய குழந்தை பெற எளிய வழி!

கடைசியாகப் பதிவு எழுதி 20 நாட்கள் ஆகிவிட்டன. வெளியூர்ப் பயணமும் மடிக்கணினிப் பழுதும் தாமதத்திற்கான காரணங்கள்.

மங்களகரமான வெள்ளிக் கிழமையன்று [09.08.13] புதிய பதிவு எழுதியே தீருவது என்று ஏற்கனவே எடுத்த சபதத்தின்படி, ‘வாஸ்து சாஸ்திரம்’ பற்றி, சற்றே நீண்டதொரு பதிவை இன்று அதிகாலையிலேயே எழுதி முடித்தேன்.

திரும்பப் படித்த போது, அடித்தல், திருத்தல், கூட்டல், கழித்தல், இடைச் செருகல் எல்லாம் செய்யாவிட்டால் என்னுடைய அடுத்த பதிவை நீங்கள் சீந்த மாட்டீர்கள் என்பது சந்தேகமறப் புரிந்தது. அதற்குச் சில நாட்கள் தேவை என்பதும் தெரிந்தது.

இருப்பினும், மேற்கொண்ட சபதத்தைக் கைகழுவ என் தன்மானம் இடம் தரவில்லை. உங்களுக்குக் கிஞ்சித்தேனும் பயன் தரும் வகையில் எதையாவது எழுதியே தீருவது என்று முடிவெடுத்தேன். எதை? எதை எழுதுவது?

தீவிரமாய் யோசித்ததில், தனித் தமிழ் அறிஞர் மறைமலை அடிகளாரின் ‘மக்கள் நூறாண்டு உயிர் வாழ்க்கை’ என்னும் நூலில் எப்போதோ படித்த ஒரு செய்தி இப்போது கை கொடுத்தது.

ஆசைப்பட்ட பிள்ளையை இயற்கையான முறையில் பெறுவதற்கான வழிவகை அதில் விவரிக்கப்பட்டிருந்தது. அதை அப்படியே என் நடையில் தருகிறேன்.

மூக்கின் வலது துவாரத்தில் சுவாசம் நிகழ்வதை ‘சூரிய கலை’ என்றும், இடது துவாரத்தில் அது நிகழ்ந்தால், அதைச் ‘சந்திர கலை’ என்றும் சொல்வார்கள். இது உங்களுக்குத் தெரிந்ததுதான்.

இந்தப் பதிவின் மைய இழையே இதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் நினைவு கொள்வது மட்டுமல்ல, உங்கள் அன்புக்குரியவளிடமும் சொல்லி வைப்பது மிகவும் அவசியம்.

கீழ்க்காணும் விடயத்தையும் அவர் காதில் போட்டு, மனதில் ‘சக்’கென்று பதிய வைப்பது உங்களின் தலையாய கடமை.

விந்தணுக்கள், வீரியத்துடன் வெளிப்பட்டு, பெண்ணின் யோனிக் குழாயில் பரவி, அவளைச் சிலிர்க்கச் செய்யும் அந்தத் தருணத்தில், உங்கள் நாசியில் ‘சூரிய கலை’ சுவாசம் [நாசியின் வலது துவாரத்தில் மூச்சுக் காற்று உட்புகுந்து வெளியேறுவது] இடம் பெறுமேயானால், கருவில் உருப்பெறும் சிசு ஆணாக இருக்கும்.

மூக்கின் வலது துவாரத்தில் சுவாசம் நிகழ நீங்கள் ஆற்ற வேண்டிய பணி என்ன?

அது மிக மிக எளிய ஒன்று.

சேர்க்கை கொள்வதற்கு முன்பு, நீங்கள் உங்கள் மனைவியின் இடப்பக்கமாக, அவரை எதிர்கொள்ளும் நிலையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். படுத்த சிறிது நேரத்திலேயே, வலது துவாரத்தில் சுவாசம் நிகழ்வதை உங்களால் அறிய முடியும். இதுவே சூரிய கலை!

எதிரெதிராக, ஒருவர் முகம் ஒருவர் பார்த்தவாறு, ஒருக்களித்துப் படுத்த நிலையில் புணர்ச்சி செய்வது சிரமம் ஆயிற்றே என்று நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தால், நீங்கள் மன்மதக் கலையை இன்னும் சரிவரக் கற்கவில்லை என்று அர்த்தம்.

தொடர்ந்து முயலுங்கள்; சாதிப்பீர்கள்.

இதே போல, பெண் பிள்ளை பெற விரும்பினால், நாசியின் இடது துவாரத்தில் சுவாசம் நிகழும் வகையில், வலப்பக்கமாக ஒருக்களித்துப் படுத்துக் கலவி புரிய வேண்டும்.

ஆரம்ப நிலையில் இம்மாதிரி முயற்சிகள் தோல்வியில் முடியலாம். இன்பம் பெறுதலே நோக்கம் என்றில்லாமல், விரும்பிய சிசுவைப் பெறுவதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்.

சூரிய கலை, சந்திர கலைன்னு கணக்குப் போட்டிட்டிருந்தா கலவியில் ஈடுபாடு குறைஞ்சிடுமேன்னு நீங்க கவலைப் படுவதும் புரிகிறது. விரக தாபத்தைத் தூண்டும் வகையில் தொடர்ந்து பேசுவதன் மூலம் உணர்ச்சி வேகம் தணியாமல் பாதுகாக்கலாம்.

மேற் சொன்ன முறையைக் கையாண்டும் ஆசைப்பட்ட ஆண் குழந்தையைப் பெற இயலவில்லை என்றால், ஆணின் குரோமோசோமில் y இல்லை என்பது அறியற்பாலது.

ஆணின் x ம் பெண்ணின் x ம் சேர்ந்தால் பெண் குழந்தை.

பெண்ணின் x ம் ஆணின் y ம் சேர்ந்தால் ஆண் குழந்தை. ஆணிடம் y குரோமோசோம் இல்லையாயின் ஆண் குழந்தைக்கு வாய்ப்பு இல்லை என்பது போன்ற உடற்கூற்று உண்மைகளெல்லாம் நீங்கள் அறிந்தவைதாம்.

இந்தப் பதிவு உங்களுக்குப் பயன் தரும் என்று நீங்கள் நம்பினால், நன்றி சொல்ல நினைப்பீர்கள். அது இப்போது வேண்டாம். பெண்ணோ ஆணோ விரும்பிய குழந்தையைப் பெற்ற பிறகு சொல்லலாம். அதுவும் எனக்கல்ல; மறைமலை அடிகளாருக்கு!