புதன், 26 பிப்ரவரி, 2020

46 சொற்களில் ஒரு ‘சுருக்’ சிரிப்புக் கதை!

நீதிமன்றம்.

கூண்டில் நின்றவரிடம் நீதிபதி கேட்டார்: “நீ ஏன் அவரைக் கொலை செய்தாய்?”

குற்றாவாளி: “பணத்துக்காக.”

“பணத்தை என்ன செய்தாய்?”

“குடித்தேன்; உல்லாசமாக இருந்தேன்.”

“கொலை செய்யப்பட்டவரிடம் வேறு என்ன இருந்தது.”

“ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் ரொட்டியும் இறைச்சியும்.”

“அவற்றை என்ன செய்தாய்?”

“ரொட்டியைத் தின்றேன். இறைச்சியைத் தூக்கி எறிந்துவிட்டேன்.”

“ஏன் அப்படிச் செய்தாய்?”

“அன்று வெள்ளிக்கிழமை. வழக்கமாக நான் ‘விரதம்’ இருக்கும் நாள்.”
========================================================================
இது, தாளித்த பழைய சோறு!
========================================================================