வெள்ளி, 25 ஜூன், 2021

நாட்டை ஆளுவோரின் அலட்சியமும் நீதியரசர்களின் அறி[ற]வுரையும்!!

'ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணாப்பட்டினம் அடுத்த மூலக்கூறு கிராமத்தில் வசிக்கும் ஆனந்தய்யா, கொரோனா நோயாளிகளுக்குப் பயன்தரத்தக்க நாட்டு மருந்து கண்டுபிடித்தது முதல், அதை மத்திய ஆயுஷ் அமைச்சகத்திற்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டதில், அந்த மருந்தில்[லேகியம்]  தீங்கு விளைவிக்கும் பொருள் ஏதும் இல்லை என்று அறிவிக்கப்ப்பட்டது வரையிலான செய்திகள் நாம் அறிந்தவையே. 

'ஐசிஎம்ஆர்' குழு இந்த லேகியத்தை ஆய்வு செய்ய உள்ளது' என்பதும் நாம் அறிந்த செய்திகளுள் அடங்கும். நாம் அறியாதது.....

'ஆனந்தய்யாவின் கண்டுபிடிப்பான கொரோனா மருந்து குறித்த முடிவை 'ஐசிஎம்ஆர்' அறிவிக்காமல் தாமதப்படுத்துவது ஏன்?' என்பதே.

இது பற்றிய கேள்வியை நடுவணரசிடம் நம் போன்றவர் எவரும் கேட்பதில்லை. காரணம், அதனால் பயனேதும் விளையப்போவதில்லை என்பதுதான்.

நாம் கேட்கத் தயங்குகிற கேள்வியை சென்னை உயர் நீதிமன்றம் கேட்டிருக்கிறது[25.06.2021 நண்பகல் 12.35 மணி, 'news7 tamil' செய்தி]. அது.....

"இலவசமாகக் கொரோனாவுக்கு மருந்து வழங்கும் 'ஆனந்தய்யா', வாழும் ஒரு மனிதக் கடவுள். அவரை நேரில் அழைத்துப் பேசி உரிய அங்கீகாரத்தை வழங்கியிருந்தால் உலக அளவில் அவர் புகழ் பெற்றிருப்பார். ஏன் செய்யவில்லை?" என்பதே.

நீதியரசர்கள் எழுப்பிய கேள்வியில், சர்வதேச அளவில் கொரோனா மருந்து விற்பனை செய்யும் மாஃபியாக்கள் இதற்குத் தடையாக இருக்கிறார்களோ என்னும் சந்தேகமும் உள்ளடங்கியிருக்கிறது.

நீதியரசர்கள் கேள்வி எழுப்பிய பின்னராவது நடுவணரசு உரிய நடவடிக்கை எடுக்குமா?

மாநில உரிமைகளைப் பறிப்பதிலும், நாட்டில் 30% எண்ணிக்கை[?]யிலான மக்களுக்கு மட்டுமே தாய்மொழியாக உள்ள இந்தியை வளர்ப்பதிலும், சில ஆயிரம்பேர் மட்டுமே பேசுகிற சமஸ்கிருதத்தைப் பரப்புவதிலும், பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகளை மக்கள் மீது திணிப்பதிலும் காட்டுகிற வேகத்தை ஆனந்தய்யாவின் மருந்தை அங்கீகரிப்பதோடு, அதிகபட்சம் அவரைக் கொரோனா ஒழிப்புக்குப் பயன்படுத்திக்கொள்வதிலும் நடுவணரசு வெளிப்படுத்துமா?

வெளிப்படுத்த வேண்டும் என்பது நம் போன்ற உண்மைக் குடிமக்களின் மிகு விருப்பம் ஆகும்.

====================================================================================