செவ்வாய், 29 மார்ச், 2022

'பூமியின் தோற்றம்'... ஒரு சுவையான 'சுருக்க' வரலாறு!

'ஒரு காலக்கட்டத்தில், சூரிய மண்டலத்தில் உருகிய தீக்கோளமாய் இருந்தது இந்தப் பூமி.

இதை, கரியமிலவாயுவும்,  அண்டவெளியிலுள்ள பிற வாயுக்களும் சேர்ந்த காற்று மண்டலம் சூழ்ந்திருந்தது.

இந்நிலையில், திட்டுத் திட்டாக உருகிக் கிடந்த தீக்கோளமான பூமியின் மேற்பரப்பை விண்கற்கள் தாக்கிய வண்ணம் இருந்தன. அதன் விளைவு.....

பூமியிலிருந்த நீராவி வெளியேறிற்று. இந்த நீராவியுடன் பூமியைச் சுழ்ந்திருந்த வாயுக்கள் பலவும் சேர்ந்து மேகங்களாக மாறின. இதனால், பூமியின் மீதான சூரிய ஒளியின் தாக்கம் குறைந்தது.

மேகங்கள் மழையாக மாற்றம்பெற்றுப் பெய்தபோது, பூமியின் மேற்பரப்பு குளிர்ந்தது; குளிர்ந்துகொண்டே இருந்தது.

தொடர்ந்து மழை பெய்துகொண்டிருக்க, பூமி மேலும் மேலும் குளிர்ச்சி அடையலாயிற்று.

இதன் மேற்பரப்பு குளிர்ந்துகொண்டேபோன நிலையில், பூமியின் உட்பக்கம் முடங்கிக் கிடந்த பெருநெருப்புக் குழம்பு, எரிமலைகளாக வெடித்து வெளியேறிக் குளிர்ந்து, மலை அடுக்குகளும், பள்ளத்தாக்குகளும் உருப்பெற்றன.

அடுத்தடுத்து மழை பெய்துகொண்டிருக்க, திடப்பொருளாக மாறிவிட்ட பூமியின் மேற்பரப்பில் குளங்குட்டைகள், ஓடைகள், ஆறுகள், பரந்த கடல்கள், பனிப்பரப்புகள், பாலைவனங்கள் என்றிவையெல்லாமும் தோன்றின.'

-பூமியின் தோற்றம் குறித்து ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து சொன்ன தகவல்களின் மிக மிக மிகச் சுருங்கிய வடிவம் இது.

==========================================================================

உதவி: 'மூதாதையரைத் தேடி...', சு.கி.ஜெயகரன், காலச்சுவடு பதிப்பகம், 2ஆம் பதிப்பு: மே, 2006.

==========================================================================

அமேசான் கிண்டெலில் என் புதிய[39ஆவது] நூல்:


பெண்மணிகளும் 'பொன் அணி'களும் ஒன்றல்ல!: 8 கட்டுரைகள் & 1 கதை (Tamil Edition) Kindle Edition


==========================================================================