திங்கள், 29 ஆகஸ்ட், 2022

எரியுது அடிவயிறு!... ஏழுமலையானுக்கு ரூ100 கோடி நகை அலங்காரம்!!

வ்வொரு புத்தாண்டு நாளிலும் திருப்பதி ஏழுமலையான் சாமியை அலங்கரிக்கப் பயன்படும் நகைகள் பின்வருமாறு:

ப்படியெல்லாம் அலங்கரித்தால்தான் ஏழுமலையான் தன் பக்தர்களுக்கு அருள்புரிவாரா?

பகவானின் மனதில் பரவசம் பொங்கி வழியுமா?

சிலை வடிவில் காட்சிதரும் ஏழுமலையான் என்றேனும் ஒரு நாள், ரூ100 கோடி நகை சுமந்த கோலத்தில் உயிர்பெற்று எழுந்தருளும் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு கண்டு கண்டு இறும்பூது எய்துவோம் என்று பக்தகோடிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்களா?

எதற்காக இந்தக் குழந்தைத்தனமான செயல்?

ஆலோசனை வழங்கிய அந்த அவதாரப் புருஷன் யார்? யாரெல்லாம்?

இவை எவையும் காரணமல்ல; ஏழுமலையானைக் குழந்தையாகப் பாவித்து, அலங்கரித்துக் கொண்டாடுவது காண்போரைக் களிப்பில் ஆழ்த்துவதே காரணம் என்கிறார்களா?

இது உண்மையா?

உண்மை எனின், ரூ100 கோடி அணிகலன்கள் சுமந்த கோலத்தில் ஏழுமலைகளின் அதிபதியைக் கற்பனை செய்தாலே என் அடிவயிறு எரிகிறதே, ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?.....

அடடே... நான் ஒரு நாத்திகன் என்பது மறந்தே போனது.

ஆம்... நாத்திகர்களுக்கு ஏழுமலையான் என்ன, வேறு எந்தவொரு கடவுளையும் பிடிக்காது! 

கந்தல் ஆடையுடன் வாழ்நாளைக் கழிக்கும் பாவப்பட்ட ஜென்மங்கள் நிறைந்த இந்தப் புண்ணிய பூமியில், ஒருவர் மட்டும் கோடி கோடி கோடி ரூபாய் அணிகலன்களுடன் காட்சி தருகிறார் என்றால் அடிவயிறு எரியத்தானே செய்யும்!!!

=========================================================================

***நகைப்பட்டியல் குறித்த தகவல், மறைந்த பத்திரிகையாளர் 'அ.மா.சாமி'அவர்களின் 'சுண்டல்'[நவமணி பதிப்பகம், சென்னை] என்னும் நூலிலிருந்து பெறப்பட்டது.