வெள்ளி, 10 பிப்ரவரி, 2023

பாம்பு கடித்தால்..........

1.இறுக்கிக் கட்டுப் போடவேண்டாம். இறுக்கி கட்டுப் போடுவதன் மூலம், சில சமயங்களில் விஷம் ஓரிடத்திலேயே தங்குவதால் கடித்தப்பகுதி அழுகிபோகும். லேசான இறுக்கத்துடன் கட்டுப்போடுவது நல்லது.

2.காயப்பட்ட இடத்தை ஓடும் நீரில் சோப்பு போட்டு மூன்று முறை கழுவவும்.


3.பாம்பு கடிபட்டவர் பதற்றமடையக் கூடாது. அவர் பதற்றமடையும்போதும் ரத்தஓட்டம் அதிகரிக்கும்.


4.பாம்பு கடித்துவிட்டால் வேகமாக நடக்கவும் கூடாது. ஏனெனில், நாம் வேகமாக நடக்கும்போதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால், நம் ரத்தத்தில் கலந்துள்ள நஞ்சு விரைவில் நம் உடல் முழுவதும் பரவி உயிரிழப்பை விரைவுபடுத்தும்.


4.இயன்றவரை பாம்புக் கடிக்குள்ளானவர் தைரியத்தைக் கைவிடாமல் இருப்பது முக்கியம். எந்த அளவிற்கு அவரின் இதயத்துடிப்பைக் கட்டுப்படுத்துகின்றோமோ, அவ்வளவிற்கு அவரைக் காப்பாறுகின்றோம் என்பது உறுதி.


5.பாம்பு கொத்திய இடத்தை, இதயத்தைவிடத் தாழ்த்தி வைக்கவும். பாம்புக் கடிக்குள்ளானவரைப் படுக்கவைத்து மருத்துவமனைக்கு அழைத்துசெல்லவும்.


6.இயலும் என்றால் பாம்பு பற்றிய விபரங்களைப் பெறவும். சில சமயங்களில் அடித்துக் கொல்லக்கூடிய நிலை ஏற்படலாம். எனினும், அவ்வாறு அடிக்க நேர்ந்தால், பாம்பின் தலையில் அடித்துக் கொல்ல வேண்டாம். ஏனென்றால், தலையை வைத்துத்தான் பாம்பை இனம் காண முடியும். கடிபட்ட நேரம் போன்ற தகவல்கள் முக்கியமானவை.


பாம்புக்கடி கிட்னியையும், கண்களையும் உடனடியாகப் பாதிக்கும்; உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்.


எனவே, பாம்பு கடித்தால் அலட்சியம் வேண்டாம். சில நேரங்களில் அது மரணத்தை ஏற்படுத்தாவிட்டாலும் உடலின் முக்கியப் பாகங்களில் நிரந்தரப் பாதிப்பை ஏற்படுத்திவிடும். உங்கள் கிராமங்கள் அவசர மருத்துவத்திற்கு எட்டாத இடத்தில் இருந்தால் இது போன்ற முதலுதவிகளை உடனே செய்ய அறிவுறுத்துங்கள்.


உலகில் ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் உள்ளன. அதில் 246 வகைப் பாம்புகள் இந்தியாவில் உள்ளன. அயர்லாந்து, நியூசிலாந்து, ஆர்ட்டிக் போன்ற பகுதிகளைத் தவிர உலகின் அனைத்துப் பகுதிகளிலும் பாம்புகள் காணப்படுகின்றன.


பாம்புகள் அனைத்தும் விஷமுள்ளவை என்ற கருத்து மிகவும் தவறானது. சில வகைப் பாம்புகளைத் தவிர பெரும்பான்மையான பாம்புகள் விஷம் இல்லாதவை. இந்தியாவில் வாழக்கூடிய நச்சுப் பாம்புகளில் ஆறு வகைப் பாம்புகள்தான் மிகவும் ஆபத்தானவை.


அவை:


1.நல்ல பாம்பு

2.கட்டு வீரியன்

3.கண்ணாடி வீரியன்,

4.சுருட்டைப் பாம்பு

5.கரு நாகம்

6. ராஜ நாகம்


http://swamikal.blogspot.com/