புதன், 24 மே, 2023

மொழி ஒரு கருவி! அதில் மந்திரச் சக்தியுமில்லை; பிடுங்குவதற்கு ஒரு மயிரும் இல்லை!!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இத்தலத்தில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக[கடவுள்கள் சுயமாகத் தோன்றி அருள்பாலிக்கும் கதைகள் இங்கு ஏராளம்] எழுந்தருளியுள்ளார். 

உமையம்மை அளித்த ஞானப் பாலினை அருந்தி ஞானசம்பந்தனார் தனது மூன்றாவது வயதில் தேவாரத்தின் முதல் பதிகமான தோடுடைய செவியன் என்ற பதிகத்தைப் பாடியது இங்குதானாம்.

3 வயதில் என்பது தவறு; பிறந்த சில வினாடிகளிலேயே பாடினாராக்கும்!!! இது பலரும் அறியாத தகவல். ஹி... ஹி... ஹி!!!

//சீர்காழி, சட்டை நாதர் கோயில் குடமுழுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (புதன்கிழமை) காலை 8:30 மணிக்குத் தொடங்கி 10 மணிக்குள் முடிவடைகிறது.

குடமுழுக்கை முன்னிட்டு கடந்த 16ஆம் தேதி முதல் பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்றுப் புனித நீர் எடுத்து வரப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

கோவிலின் மேற்குக் கோபுர வாசல் அருகே 88 குண்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ள யாக சாலையில், தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தப் பிரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், யாத்ரா ஹோமம், யாத்ரா தானம் மற்றும் யாகசாலைப் பிரவேசம் எல்லாம் நடைபெற்றன// https://www.dailythanthi.com/News/State/after-32-years-at-chattainath-temple-kudamukku-970693

இன்னும் 1008 யாகம், அதற்கும் மேற்பட்ட தானம் எல்லாம் இருக்கு. மறந்துட்டாங்களா, ஒத்தி வெச்சுட்டாங்களான்னு தெரியல.

//தொடர்ந்து 20ஆம் தேதி(சனிக்கிழமை) முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. 21ஆம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளும், அதனைத் தொடர்ந்து 22ஆம் தேதி(திங்கட்கிழமை) பரிவார மூர்த்திகளுக்குக் குடமுழுக்கு நடைபெற்றது. நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆறாம் கால மற்றும் ஏழாம் கால யாக பூஜைகளும் தீபாராதனையும் நடைபெற்றன// என்றிவையும் இது தொடர்பான செய்திகள்.

இன்று[24.05.2023] மேளதாளங்களோடு ஊர்வலம் வந்து குடமுழுக்கு நடத்தவிருக்கிறார்களாம்.

* * * * *

கோயில் பழுதடைந்திருந்தால் புதுப்பிக்கச் செலவு செய்யலாம்.

அது போகக் கைவசம் நிறையப் பணம் இருந்தால், கோயில் சார்பாகவே ‘தான தர்மம்’ பண்ணலாம். தீராத நோயாளிகள் நாட்டில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்களின் மருத்துவச் சிகிச்சைக்கு வழங்கலாம்.

அனாதை விடுதிகளும் முதியோர் இல்லங்களும் ஏராளமாக இருக்கின்றன. நேர்மையாக நடத்தப்படுகிற இல்லங்களுக்கு உதவலாம்.

பணம் செலவழிக்க இப்படி எத்தனையோ நல்ல வழிகள் இருக்க இந்தக் கும்பாபிசேகம், கோபுர அபிசேகம், சிலை அபிசேகம் எல்லாம் எதற்கு?

மனிதர்கள் தங்களின் உணர்வுகளையும் எண்ணங்களையும் தங்களுக்குள் பகிர்வதற்காக அவர்களாலேயே உருவாக்கப்பட்டது மொழி.

அது[சமஸ்கிருதமோ, தமிழோ வேறு எதுவோ] ஒரு கருவி மட்டுமே. அதைக் கடவுள் மொழி என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அதில் ‘மந்திரச் சக்தியுமில்லை ஒரு மசுரும் இல்லை’ என்ற விழிப்புணர்வு தமிழனுக்கு எப்போது ஏற்படுகிறதோ அப்போதுதான் அவன் உருப்படுவான்!