எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

வியாழன், 17 ஜூலை, 2025

வரலாறு காணாத விமானமும் இந்திய வரலாறு கண்டிராத பிரதமரும்[மோடி]!!!


தென்ன வரலாற்றில் 'முதல்முறை'யாக?

இந்த ‘முதல்முறை’ ஏராளமான வேள்விகளைக் கேட்கத் தூண்டுகிறது.

அவற்றில் கொஞ்சம்.....

*இத்தனை நீள விமானத்தைத் திருச்சி நிலையம் கண்டதில்லையா?

*வேறெந்த முன்னாள் பிரதமருக்கும் இல்லாத வகையில், மோடி வருகைக்கு மட்டும்தான் ஒத்திகை நடத்தப்படுகிறதா?[வேறெந்த நாட்டுக்குச் சென்றாலும் இந்த ஒத்திகை தவறாமல் இடம்பெறுமா?

*குட்டையான[நீளம் குறைவாக] விமானம் என்றால் ஒத்திகை நடைபெற்றிருக்காதா?

*மோடிக்குப் பதிலாக, ஒரு ‘டூப்ளிகேட்’ பிரதமர் வந்து இறங்குவதாக இன்னொரு ஒத்திகை நடத்தப்படுமா?

*இந்த ‘ஒத்திகை’ என்பதே திருச்சி விமான நிலைய வரலாற்றில் முதன் முறையாக நடத்தப்படும் ஒன்றா?

ஒத்திகையாம் ஒத்திகை, ஒற்றை நபரின் வருகைக்கு இத்தனை அலப்பறையா?

ஆம், தேவைதான். நம் பிரதமர்[தனி நபரல்ல] கடவுளால் அனுப்பப்பட்டவர்! ‘தர்மச் சக்கரவர்த்தி’ என்னும் அதி உன்னதப் பட்டம் பெற்றவர்!!