எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 25 ஆகஸ்ட், 2025

அகிலம் இகழ் கிறுக்கன் ‘அனுராக் தாக்கூர்’இன் பதவி[எம்.பி.] பறித்திடுக!

//இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ‘பி.எம்.ஸ்ரீ’ பள்ளியில் தேசிய விண்வெளித் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பா.ஜ.க. எம்.பி. அனுராக் தாக்கூர் கலந்துகொண்டார்//* என்பது செய்தி.

“முதன் முதலாக விண்வெளிப் பயணம் மேற்கொண்ட வீரர் யார்?” என்று இந்த ஆள் கேட்டபோது, “நீல் ஆம்ஸ்ட்ராங்”[இவர் சந்திரனுக்கு முதலில் சென்றவர்; விண்வெளிக்கு முதலில் சென்ற வீரர் யூரி காகரின்> சோவியத்]ன்று அறிவியல் ரீதியான பதிலை மாணவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

இந்தச் சங்கியோ[அனுராக் தாக்கூர்], "எனக்குத் தெரிந்து உலகின் முதல் விண்வெளி வீரர் அனுமன்தான்[வால்மீகியால் மனிதரைப்போல் கற்பனை செய்யப்பட்ட ஒரு குரங்கு] என்று சொல்லி, மாணவர்களின் பகுத்தறிவைச் சிதைத்து, அவர்களின் மனங்களில் நஞ்சு தூவியிருப்பது மன்னிக்கத் தகாத கடும் குற்றம்.

இதற்கு முன்பும், இந்த முழுமூடம் மாணவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களிடத்தும், அனுமன் குரங்கு கடல் தாண்டிய கற்பனைக் கதையைப் பரப்புரை செய்திருக்க நிறையவே வாய்ப்புள்ளது.

இந்த நபர் பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்வதற்குத் தடை விதிப்பது மட்டுமல்ல, வாக்காளரிடையே மூடத்தனம் பரப்பிப் பெற்றிருக்கும் ‘எம்.பி.’ பதவியையும் பறித்தல் வேண்டும்.

ஆனால், சங்கிகளின் பிடியிலிருந்து இந்த நாடு விடுவிக்கப்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.

சாத்தியமாவது எப்போது?

* * * * *

*https://www.maalaimalar.com/news/national/think-hanuman-ji-was-1st-space-traveller-bjp-mp-anurag-thakur-to-students-785726?utm_source=newsshowcase&utm_medium=gnews&utm_campaign=CDAqEAgAKgcICjDtzp8LMPrYtwMw2Z-8BA&utm_content=rundown