எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 23 செப்டம்பர், 2025

நம் பிரதமருக்குத் தேவை தினசரித் ‘திருஷ்டி’ கழித்தல்!!!

இது[பாரத்> இந்தியா] புண்ணியப் பூமி. மக்கள் கொடுத்துவைத்தவர்கள்.

இல்லையெனில், ஒப்பனையில் சாதனை நிகழ்த்தியவரும், கம்பீரமும், கவர்ச்சியும், கொள்ளை அழகும் உள்ள ஒருவரைப் பிரதமராகப் பெறும் வாய்ப்பு கிடைத்திருக்காது.

உலக அளவில் பிரதமர், அல்லது அதிபர்களுக்கான ஆணழன் போட்டி நடத்தினால்  அதில் வென்று கிரீடம் சூடுபவர் நம் பிரதமரே.

அவரின் அமைச்சர்களுக்கும் உயர் அதிகாரிகளுக்கு நம் வேண்டுகோள்:

நம் பிரதமருக்குத் ‘திருஷ்டி’ கழிக்கும் சடங்கை நாள் தவறாமல் நிறைவேற்றுவீர்!

மோடி நீடூழி வாழ்க!