//யூதர்கள், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோர் புனிதமாகக் கருதும் சினாய் மலையில் ஒரு பெரிய சுற்றுலாத் திட்டம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் மொழியில் 'ஜபல் மூசா' என அழைக்கப்படும் இந்த மலையில், மோசேக்குப் பத்துக் கட்டளைகள் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. பைபிள் & குர்ஆன் கூற்றுப்படி, எரியும் புதரில் இருந்து மோசேவிடம் கடவுள் பேசிய இடம் இதுதான் என்று பலர் கருதுகின்றனர்//[https://www.bbc.com/tamil/articles/c179q4dxy7jo]
கட்டளைகள் பத்தோ பத்து நூறோ அவையல்ல நம் அடி மனதை உறுத்துவது; எரியும் புதரிலிருந்து மோசேவிடம் கடவுள் பேசினார் என்கிறார்களே அதுதான்.
கடவுளே நெருப்பு வடிவில் இருந்திருப்பாரோ?
புதருக்குள் மறைந்திராமல், மோசேவின் எதிரில் நெருப்பு வடிவிலேயே காட்சி தந்து பேசியிருக்கலாமே?[வேறு வேறு உருவங்களிலும் அதைச் செய்திருக்கலாம்] அனல் பட்டு மோசே கருகிவிடுவார் என்று நினைத்திருப்பாரோ? வேறு காரணங்களும் இருக்குமோ?
எது எப்படியோ, இம்மாதிரியான தகவல்கள் பக்திமான்களின் கடவுள்[சர்வ மதக் கடவுள்கள்] பக்தியை அதிகரிப்பதற்கு மாறாக, கடவுள்கள் குறித்த மூடநம்பிக்கைககளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்பதுதான் அடியேனின் தீராத கவலை[ஹி... ஹி... ஹி!!!].
என் கவலை எப்போது தீரும்?
