//பீகார் மாநிலம் சாப்ராவில் நேற்று(அக். 30) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்[தேர்தல் பரப்புரை] பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் தனது 44 நிமிட உரையின் ஒருபகுதியில், "தமிழ்நாட்டில் திமுகவினர் பீகாரைச் சேர்ந்த உழைக்கும் மக்களைத் துன்புறுத்துகின்றனர்"* என்று கூறினார்//என்பது செய்தி.
பீகாரில் ஆட்சி நடத்துவது மோடியின் கழிசடைக் கட்சிதான்[நிதீஷ் வெறும் டம்மி].
உலகம் சுற்றுவதிலும், கோயில்கள் கட்டி முட்டாள்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுவதிலும் மோடிக்கு உள்ள அக்கறையில், ஒரு சிறு பங்குகூட பீகார் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் இல்லை.
அதன் விளைவுதான், வயிற்றுப்பாட்டுக்காகத் திருட்டு ரயில் ஏற்றிக் கூட்டம் கூட்டமாகத் தமிழ்நாடு வருகிறார்கள் பீகாரிகள்[வருங்காலத்தில் பல இன்னல்களைத் தமிழ்நாடு எதிர்கொள்ள உள்ளது]. அவர்களின் பசியைத் தணிக்கிறது தி.மு.க. ஆளும் தமிழ்நாடு.
மோடி தமிழ்நாட்டுக்கு[+ஸ்டாலின்] நன்றி சொல்லியிருக்க வேண்டும். மாறாக, பீகார் மக்களிடம் வாக்குப் பெறுவதற்காகக் குரோதத்துடன் நடந்துகொண்டிருக்கிறார்.
இவர் இந்தியாவின் பிரதமர். ஒட்டுமொத்த அதிகாரமும் இவரின் ஒரு சுட்டு விரல் அசைவில்[எப்போதும் சுட்டுவிரல் அசைத்துப் பேசுவதன் உள்ளர்த்தம் இதுதான்]. உண்மையிலேயே தி.மு.கட்சியினர் பிழைக்கவந்த பீகாரிகளைத் துன்புறுத்தியிருந்தால், அதன் தலைவரான மு.க.ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்கலாம்[ஆட்சியையே கலைக்கலாம்]. அதைத் தவிர்த்து வஞ்சினத்துடன் பொய்ப் பழி சுமத்துவது கடுமையாகக் கண்டிக்கத்தக்க இழிசெயல்.
இதைச் செய்யத் தூண்டுவது பதவி வெறி. உயிருள்ளவரை பிரதமராக நீடிக்க வேண்டும் என்னும் பேராசை.
எந்த ஒன்றுக்கும் ஆசைப்படுவதில் தவறில்லை. பேராசைப்படுவது.....
பெருங்கேட்டுக்கு வழிவகுக்கும்.
* * * * *