எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 13 அக்டோபர், 2025

போட்டாரே ஐயர்[மணிசங்கர்] ஒரு போடு!!!

‘தமிழ்நாடு தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் ஞாயிற்றுக்கிழமை ஒரு துணிச்சலான அறிவிப்பை[ஒரு நிகழ்வில் பேசும்போது] வெளியிட்டார்’ என்று தொடங்கி, அதன் உள்ளடக்கத்தையும் வெளியிட்டிருக்கிறது ஒரு முன்னணி ஊடகம்*

அறிவிப்பின் சாரம்: 

=திராவிட அரசியல் என்பது தமிழர்களுக்கென்று தனி நாடு[திராவிட நாடு] அமைவதை முதன்மை நோக்கமாகக் கொண்டது.

=திராவிடச் சக்திகளின் உதவியின்றி நானோ, ப.சிதம்பரமோ தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவது சாத்தியமில்லை.

=இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னரே, இந்தத் திராவிடச் சக்திகள்' இந்தியாவை இந்துஸ்தான், பாகிஸ்தான், திராவிடநாடு என்று மூன்றாகப் பிரிக்கப்படுதல் வேண்டும் என்றன. 

=இவர்களின் இந்தப் பிரிவினைக் கொள்கைக்கு, அலுவல் மொழிப் பிரச்சினை மையமாக இருந்துவருகிறது[1963 ஆம் ஆண்டு அலுவல் மொழி மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​திமுக நிறுவனர் சி.என். அண்ணாதுரை[ஆதரவாளர்களால் அன்புடன் அண்ணா என்று அழைக்கப்பட்டார்] மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். ஜனநாயகம் என்பது பெரும்பான்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல[பெரும்பான்மையோரால் பேசப்படுவதாகச் சொல்லப்படும் ‘இந்தி’ மறைமுகமாகச் சுட்டப்படுகிறது].

=அண்ணாதுரை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​அவர் ஒரு பிரிவினைவாதியாக வந்தார். அவர் அடல் பிஹாரி வாஜ்பாயிக்கு எதிராக வாதிட்டது குறிப்பிடத்தக்கது. நீங்கள் என் மீது இந்தியைத் திணித்தால், நான் இந்த நாட்டை விட்டு வெளியேறுவேன் என்று அவர் கூறியது அனைவருடைய சிந்தனையையும் தூண்டியது.

=இன்றும் கூட, உங்களில்[ஆட்சியாளர்கள்] எவரும் தமிழர்களைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. தமிழ்நாடு நாட்டின் வேறு எந்தவொரு மாநிலத்தையும் போன்றதொரு மாநிலம் அல்ல. அதனால்தான், நானோ ப.சிதம்பரமோ திராவிடச் சக்திகளின் உதவிஉயின்றித் தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்கிறேன் நான்." 

                                          *   *   *   *   *

***எஞ்சியுள்ள, ஐயரின் கருத்துகளையும் வாசிக்கக் கீழ்க்காணும் முகவரியைச் சொடுக்குக.

*https://www.msn.com/en-in/money/topstories/neither-me-nor-chidambaram-can-get-mani-shankar-aiyar-says-dravidian-forces-sought-a-separate-nation/ar-AA1Omqju?ocid=winp2ftaskbar&cvid=68ecf041b9fe4b40a81a486ed4ce791d&ei=41 > 3h