முற்போக்கு எழுத்தாளர்கள் | கர்நாடகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முற்போக்கு எழுத்தாளர்கள் | கர்நாடகா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

கர்னாடகாவில் முற்போக்குச் சிந்தனையாளர்கள் 35 பேர்! தமிழ்நாட்டில்.....?!

கர்னாடகாவில் பகுத்தறிவுச் சிந்தனையுள்ள பிரபல எழுத்தாளர்கள் 35 பேர் இருக்கிறார்கள் என்பதை இன்றைய நாளிதழ்ச்[தி இந்து, 10.09.2017] செய்தியால் அறிய நேர்ந்தது. 
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கர்னாடகாவில் முற்போக்குச் சிந்தனையுள்ள எழுத்தாளர்களுக்குக் கர்னாடக அரசு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கியுள்ளதாம்.

’35 பேர்’ என்னும் புள்ளிவிவரம் எம் மனதில் பெருமளவில் பொறாமைத் தீயை மூட்டியுள்ளது.

அங்கே, முற்போக்குச் சிந்தனையுள்ள [பிரபல]எழுத்தாளர்கள் 35 பேர். நம் மாநிலத்தில் எத்தனை பேர் தேறுவார்கள்?

ஒத்தைப்படை எண்ணிக்கையைக்கூடத் தாண்டமாட்டார்கள் என்பதே என் எண்ணம்.

இங்குள்ள மிக மிகப் பெரும்பாலான பத்திரிகைகள் மாய்ந்து மாய்ந்து ஆன்மிகத்தின் பெயரால் மூடநம்பிக்கைகளை  வளர்ப்பவை. இவற்றின் நீடித்த ஆதரவைப் பெறுவதற்காக ஆன்ம நேயராகத் தம்மைக் காட்டிக்கொள்ளவதில் முனைப்புக் காட்டுவார்களே தவிர மறந்தும் ஆன்மிகத்தின் பெயரால் வளர்க்கப்படும் மூடநம்பிக்கைகளைச் சாட மாட்டார்கள் இவர்கள்.

விதிவிலக்காகச் சிலர் இருத்தலும்கூடும்.

அந்தச் சிலரை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை நம் மாநில அரசு உறுதி செய்திடல் வேண்டும். செய்யுமா?

‘ஆம்’ எனில், அத்தகையோர் பற்றிய பட்டியலையும் அவர்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு பற்றிய விவரங்களையும் உடனடியாக வெளியிடுதல் வேண்டும்.

கோவையில் முற்போக்குச் சிந்தனையாளர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தமிழ்மக்கள் அறிவார்கள். அவ்வாறான அவலங்கள் இனியும்  இங்கே நிகழ்ந்துவிடாமல் தடுத்திட இது உதவும்.

அரசு நிகழ்வுகளில்கூடத் தம்மைப் பழுத்த ஆன்மிகவாதிகளாகக் காட்டிக்கொள்ளத் தவறாத நம் ஆட்சியாளர்கள், கொஞ்சமேனும் நடுநிலை உணர்வுடன் கர்நாடகா அரசை முன் உதாரணமாகக்கொண்டு செயல்படுதல் வேண்டும். 

செய்வார்களா?
0000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000
தமிழ்மணத்தில் இணைக்க இயலவில்லை!