அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

சிற்றின்பம் பெறுதலில் சில விநோதங்கள்!!!


பத்திரிகைகளிலும் பருவ இதழ்களிலும் பாலுறவு குறித்து நிறையப் பேர் கேள்விகள் கேட்கிறார்கள்; பாலியல் நிபுணர்கள் பதில்கள் அளிக்கின்றனர். மஹிந்தர் வத்ஸா என்பவர் அதுபோன்ற ஒரு நிபுணர். சமீபத்தில் அவர் காலமாகிவிட்டாராம்.

ஒரு முறை B.B.C.க்குப் பேட்டியளித்த அவர்....

"என் மனைவி என்னைத் துடைப்பத்தால் அடித்தால் தவிர, எனக்குப் பாலுறவு விருப்பம் தூண்டப்படுவதில்லை. ஆனால், சமீபத்தில் என் மனைவி இறந்துவிட்டார். எனவே, துடைப்பத்தால் என்னை அடித்து, பாலுறவு விருப்பத்தைத் தூண்டக்கூடிய ஒரு மனைவியை நான் எப்படிக் கண்டுபிடிப்பது என்று ஒருவர் கேட்டார்" என்று சொல்லிச் சிரித்தாராம்.

துடைப்பத்தால் அடி வாங்கினால்தான் 'அது'க்கான 'மூடு' வரும்னு சொன்ன அந்த ஆள், நல்ல வேளை 'அங்கே' அடித்தால்தான் 'மூடு' வரும்னு சொல்லல!

இப்படித் துன்பத்திற்கு ஆளாகிச் சிற்றின்பம்[பேரின்பமய்யா!] அனுபவிப்பதை மேற்கத்தியச் சமுதாயத்தில் பி.டி.எஸ்.எம்.(BDSM) என்கிறார்களாம். ஆனால், பல நாடுகளில் இது கேள்விப்படாத வார்த்தையாக இருக்கிறது. 

இதுபோன்ற நிகழ்வுகளில் யாரையாவது துன்புறுத்துதல் அல்லது தனக்குத் தானே துன்புறுத்திக்கொள்ளுதல் மூலம் பாலுறவு விருப்பத்துக்கான தூண்டுதல் பெறுகிறார்கள். 

இதில் துன்புறுத்துபவர் ஆதிக்கம் செலுத்துபவர் என்றும், துன்புறுத்தல்களை ஏற்பவர் அடங்கிச் செல்பவர் என்றும் கருதப்படுகிறார்கள். துன்புறுத்தல் செயல்களைச் செய்பவரும், அதை ஏற்பவரும் இந்தச் செயலால் பாலுறவுக்கான தூண்டுதலைப் பெறுகிறார்கள். ஒருவரை அடிமை போல நடத்துதல் அல்லது தானே அடிமை போல நடந்துகொள்ளுதல் என்ற பாணியும் இதில் இருக்கிறதாம்.

இப்படியெல்லாம் பாலுறவு! இதில் இன்பசுகம் காணும் கிறுக்கர்கள்!! நல்லாப் படைச்சாரய்யா கடவுள்!!!

=================================================================================

https://www.bbc.com/tamil/global-55940851