வியாழன், 14 பிப்ரவரி, 2019

மதவெறியர்களால் அழியப்போவது மதங்களா, மனிதகுலமா?!


#ஷியா முஸ்லிம் என்பதால் சவுதியில் 6 வயது சிறுவன் தனது தாயின் முன் கொல்லப்பட்ட துயரச் சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், சகாரியா அல் ஜாபர் என்ற 6 வயது சிறுவன் தனது தாயுடன் மெதினாவில் உள்ள புனிதத் தளத்திற்குச் செல்வதற்காகத் தனது தாயுடன் யாத்திரைக்கு வந்தார். அப்போது டிரைவர் ஒருவர்[சன்னி முஸ்லிம்] அவர்களிடம் ''நீங்கள் ஷியா முஸ்லிமா?'' என்று கேட்டுள்ளார்.
அதற்கு சகாரியாவின்  தாய் ''ஆம்'' என்று கூற, டாக்ஸியின் ஜன்னல் கண்ணாடியை உடைத்த டிரைவர், சகாரியாவிடம், ''நீ இஸ்லாமின் தவறான வேரிலிருந்து வந்தவன்'' என்று கூறிக்கொண்டே சகாரியாவின் தொண்டையில் குத்திக் கொலை செய்தார். இதனைக் கண்ட சகாரியாவின் தாய் மயங்கி விழுந்தார்'' என்று செய்தி வெளியானது
இதனைத் தொடர்ந்து சகாரியாவின் கொலைக்கு நியாயம் வேண்டி, அந்நாட்டு முற்போக்காளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
சமூக வலைத்தளங்களிலும் #JusticeforZakaria என்று பதிவிட்டு அவரது மரணத்துக்குக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்#['தமிழ் இந்து, 13.02.2018].

சகாரியா அல் ஜாபர்.....

நன்றி: makkalviruppam.blogspot.com

காதல் வெறியோ, காம வெறியோ, மத வெறியோ வெறி பிடித்து அலைபவர் எவராயினும் அவர்களால் மனித சமுதாயம் அளவிறந்த அல்லல்களுக்கு உள்ளாகி, ஒரு காலக்கட்டத்தில் முற்றிலுமாய் அழிந்தொழியும் என்பதில் சந்தேகமில்லை.

மேற்கண்டது போன்ற சூதுவாதற்ற மழலைச் செல்வங்களைச் சிதைத்து அழிக்கும் கொலைவெறியர்கள் பிற மதங்களிலும் இருக்கிறார்கள்.

இந்தக் கொலைகாரர்களுக்கு எதிராகப் பல்முனைத் தாக்குதல் நிகழ்த்துவது உடனடித் தேவையாகும். மனித நேயம் போற்றும் அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியமாகும்.
================================================================================
அமேசான் கிண்டிலில் என் படைப்புகள்.....