எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

உருளுங்கடா...உருளுங்க!!! [‘உருளுதண்டம்’ குறித்த கவிதை]

உருளுங்கடா உருளுங்கடா உருளுங்க உருளுங்க
‘அவர்கள்’ வீசிய எச்சில் இலையென்ன
காறித் துப்பிய எச்சில்மீதும் உருளுங்கடா
எச்சிலினும் புனிதமடா அப்புனிதரின் சிறுநீர்
சிந்தை குளிர அச்சிறுநீரில் உருளுங்கடா
சந்தனமாய்க் கமகமக்கும் அன்னாரின் ‘பீ..ப்..பீ..ப்..பீ..ப்’
உருளுங்கடா உருளுங்கடா அதன்மீதும் உருளுங்கடா
சந்தேகமே வேண்டாம் நீங்கள் உருண்டுகொண்டே
‘சொர்க்கம்’ சேர்வது நிச்சயம் நிச்சயமே!  

படைப்பு: ‘பசி’பரமசிவம்

படங்கள்: இன்றைய[20.12.2015] ‘தி இந்து’ விலிருந்து.....




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக