கடந்த 10 ஆண்டுகளில் சமஸ்கிருதத்தை மேம்படுத்த ரூ.2,533 கோடி மத்திய அரசு செலவிட்டிருப்பது ஆர்டிஐ மூலமாக அம்பலமாகி இருக்கிறது. ஆனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஒடியா உள்ளிட்ட செம்மொழிகளுக்கு ஆண்டுக்கு வெறும் ரூ.13 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது[https://tamil.oneindia.com].
சமஸ்கிருதம் செத்தொழிந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன[கோயில்களில் வேதம் ஓதி, ‘அவர்கள்’ பிழைப்பு நடத்த மட்டுமே பயன்படுகிறது].
10 ஆண்டுகளில் அதற்கு ரூ2533// கோடி செலவு செய்தும்[மோடி ஆட்சியில்] அது செத்த சவமாகத்தான் இருக்கிறது.
வீணடிக்கப்பட்டதா அல்லது விவரமானவர்களின் சேமிப்புக் கணக்கில் சேர்க்கப்பட்டதா?
சேர்த்த அந்தப் பிழைக்கத் தெரிந்த புத்திசாலி யார்?
புத்திசாலியா, புத்தி சாலிகளா?
அவர் யார் அல்லது, அவர்கள் யாவர் என்பது இந்த நாட்டின் பிதாமகன் மோடிக்குத் தெரிந்திருக்குமா?
* * * * *