“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 26 பிப்ரவரி, 2020

46 சொற்களில் ஒரு ‘சுருக்’ சிரிப்புக் கதை!

நீதிமன்றம்.

கூண்டில் நின்றவரிடம் நீதிபதி கேட்டார்: “நீ ஏன் அவரைக் கொலை செய்தாய்?”

குற்றாவாளி: “பணத்துக்காக.”

“பணத்தை என்ன செய்தாய்?”

“குடித்தேன்; உல்லாசமாக இருந்தேன்.”

“கொலை செய்யப்பட்டவரிடம் வேறு என்ன இருந்தது.”

“ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் ரொட்டியும் இறைச்சியும்.”

“அவற்றை என்ன செய்தாய்?”

“ரொட்டியைத் தின்றேன். இறைச்சியைத் தூக்கி எறிந்துவிட்டேன்.”

“ஏன் அப்படிச் செய்தாய்?”

“அன்று வெள்ளிக்கிழமை. வழக்கமாக நான் ‘விரதம்’ இருக்கும் நாள்.”
========================================================================
இது, தாளித்த பழைய சோறு!
========================================================================