எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 27 ஜூன், 2025

கொடுத்துவெச்ச மகராசன்! பொறாமையில் புழுங்குது என் பொல்லாத மனசு!!

கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்வதை வழக்கமாக்கியுள்ளார். இந்த நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாட்டில்[இதில் மெச்சும்படியாக என்ன சாதிக்கிறார்கள்?] கலந்துகொள்ள, அவர் பிரேசில் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் பயணத்துடன், டிரினிடாட், டொபாகோ, அர்ஜென்டினா, கானா, நமீபியா ஆகிய 4 நாடுகளுக்குப் பயணம்[சுற்றுலா] மேற்கொள்கிறார்> செய்தி.

இதன் மூலம் உலகளாவிய நாடுகளுடன் உறவுகளை அவர் மேம்படுத்துவதாக, தினத்தந்தி போன்ற ஊடகங்கள் ஊதிப் பெருக்கி அவரின் புகழ் பரப்புகின்றன.

இயல்பாகவே பொறாமைப்படும் குணம் அடியேனுக்குக் கொஞ்சம் அதிகம்.


மோடி குறித்த இது போன்ற செய்திகளை வாசிக்கும்போதெல்லாம்.....


அவருக்கென்ன, நேரத்துக்கொரு ஆடை! வாரத்துக்கு நான்கு சுற்றுலா! சு.உலா இல்லாதபோது கோயில் கோயிலாகப் பக்தி உலா! தேர்தல் நடக்கவுள்ள உள்நாட்டு ஊர்களில் வீதி உலா!


“கொடுத்துவெச்ச மகராசன்யா” என்று சொல்லிச் சொல்லிப் பொறாமைப்பட்டுப் பட்டுப் புழுங்குது என் பொல்லாத மனசு!

* * * * *

https://www.dailythanthi.com/news/india/pm-modi-to-visit-brazil-next-week-1165272