சனி, 28 ஜூன், 2025

பலியாகும் பக்தர்களும் பலி கொடுத்துப் புவி ஆளும் புத்திசாலிகளும்!!!

நகரங்களில் பிறந்து நகரங்களிலேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் கிராமங்களின் மேய்க்கப்படும் ஆட்டு மந்தை பற்றி அறிந்திருப்பார்களே தவிர, மந்தையை நேரில் காணும் வாய்ப்புக் கிட்டியிருக்காது. 

கீழ்வரும் காணொலியில் முட்டி மோதி நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறும் மனிதர் கூட்டத்தைக் கானலாம். அந்தக் கூட்டத்திற்குப் பெயர்தான்  ‘மனித மந்தை’.

தேர்த்திருவிழாவில் அலைமோதும் இந்த மனிதர்களுக்குப் பதிலாக அங்கே செம்மறி ஆடுகள் இருப்பதாகக் கற்பனை செய்தால் ஆட்டு மந்தையை நேரில் காணும் வாய்ப்பையும் பெறலாம்.

இந்த அறிவியல் யுகத்திலும், அலங்கரிக்கப்பட்ட வெறும் பொம்மையை[பூரி ஜெகன்னாதர்]த் தேரில் வைத்து இழுப்பதாலும், அதைக் கண்டு கண்டு கன்னங்களில் போட்டுக்கொள்வதாலும், நினைத்தது நடக்கும் என்று நம்பும் முட்டாள்கள் இந்த நாட்டில் கோடிக்கணக்கில் இருப்பது  வெட்கக்கேடானது.

நாட்டை ஆளுவோருக்கு இது வெட்கக்கேடான செயல் என்பது தெரியும்.

தெரிந்திருந்தும் தொடர் பகுத்தறிவுப் பரப்புரைகள் மூலம் இவர்களைத் திருத்த முயலாமல், விழா என்னும் பெயரில் கூட்டம் கூட வசதிகள் செய்து தரும் அவர்கள் கொலைகாரர்கள்.

ஆம், விழா என்னும் பெயரில், இல்லாத கடவுள்களுக்கு நூற்றுக்கணக்கில் மனித உயிர்களைப் பலியிடும்[தேர்த் திருவிழா நெரிசலில் படுகாயமுற்றவர்கள் 170 பேர்> பலர் பலியான தகவல் விரைவில் வெளியாகும்] இவர்கள் கொலைகாரர்களே என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.

யார் அந்தக் கொலைகார்கள் என்று கேள்வி எழுப்பலாம். பதில் சொல்வது தண்டனைக்குரிய குற்றமாயிற்றே!