திங்கள், 23 ஜூன், 2025

புத்திசாலிக்குப் புத்தி சொல்லும் புத்தி கெட்ட அண்ணாமலை!!!

"செல்ஃபி கேட்டால் திருநீற்றை அழிக்கிறார் ஒரு அரசியல் தலைவர்"- அண்ணாமலை[ மாலை மலர், 22 ஜூன் 2025 9:01 PM].

திருநீறு என்பது வெறும் சாம்பல்.

‘அதை நெற்றியில் தீட்டுவது பக்தியின் அடையாளம். அதன் மூலம் ஆண்டவனின் அருள் பெற்றுத் துன்பங்களிலிருந்து விடுபடலாம் என்பது வெறும் விருப்பமே தவிர, அதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் ஏதுமில்லை இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பிற மதத்தவர் கையாளும் மத அடையாளங்கள் உட்பட.

கடவுள்[மேம்பட்ட சக்தி] நம்பிக்கை உள்ளவராக இருப்பினும், ஒருவர்  கூர்த்த அறிவுடையராயின் மதச் சின்னங்கள் அணிவதையோ, மத அடையாளங்களை ஏற்பதையோ விரும்பமாட்டார்.

மதச் சின்னங்களில் ஒன்று திருநீறு.

நெற்றியில் திருநீறு பூசுபவர், அயராது சிந்திப்பாராயின், அதைச் செய்வது முட்டாள்தனம் என்பதைப் புரிந்துகொண்டு அந்தச் சின்னத்தைத் தவிர்ப்பார்.     அவர் பாராட்டுக்குரியவர்.

அண்ணாமலையின் எள்ளலுக்கு ஆளானவர் நெற்றித் திருநீரை அழித்ததால் அவரும்[திருமாவளவன்?] பாராட்டுக்குரியவரே.

செல்ஃபி கேட்டதால் திருநீரை அழித்தார் என்று அவரை எள்ளி நகையாடியிருக்கிறார் அண்ணாமலை.

காரணம், அண்ணாமலைக்கு வயதான அளவுக்குப் புத்தி  வளரவில்லை என்பதே.

அதை வளர்த்துக்கொள்வது அவருக்கும் அவரைச் சார்ந்திருப்போருக்கும் நல்லது; நாட்டுக்கும்தான்.