அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 9 ஜூலை, 2016

வாசிப்பீர்!! “இவனுக்கு வேறு வேலையே இல்லையா?” என்று ஏசாதீர்!!

என் பதிவுகளை என் மனைவி வாசித்தார்! “பின்னூட்டப் பெட்டியைப் பூட்டி வைத்தது சரியே” என்றார். “எப்படி?” என்றேன். புன்சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்தது!
புலன்களால் அறியப்படுகிற இந்தப் பிரபஞ்சம் எப்போது உருவானது? 

உருவாக்கப்படவில்லை;  எப்போதும் இருந்துகொண்டே இருப்பது என்றால், அது எப்படிச் சாத்தியம் ஆயிற்று? 

உருவானது அல்லது உருவாக்கப்பட்டது எதன் பொருட்டு? அதற்கு ஆதாரமாக இருந்தவை எவையெல்லாம்? எவரெல்லாம்?

பிரபஞ்சம் வெறும் காட்சிப் பொருளாகவே இருந்திருக்கலாமே. கணக்கிலடங்காத உயிர்களின் தோற்றங்களும் போராட்டங்களும் அழிவுகளும் ஏன்?

இப்படி எத்தனையோ ‘ஏன்’களுக்கு விடை தெரியாமல் விழி பிதுங்கிக்கொண்டிருக்கிறது அறிஞர் உலகம்.

இவற்றில் ஏதேனும் ஒன்றே ஒன்றுக்கேனும் இன்றளவும் விடை கிடைத்திடவில்லை. 

ஆக, பருப்பொருள்கள் குறித்த ஆய்வுகளே முற்றுப் பெறாத நிலையில், உணர மட்டுமே முடியும் என்று சொல்லப்படும் நுண்பொருளாம்[???] கடவுளைக்...கடவுள்களைக் கற்பித்ததும், அவருக்காக...அவர்களுக்காக அளவிறந்த பொருளையும் பொழுதையும் வீணடிப்பதும் மனிதகுலம் செய்துவரும் மாபெரும் தவறுகளாகும்.
***********************************************************************************************************************.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக