எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

செவ்வாய், 12 மே, 2015

உயிர்கள் உறங்கலாம். நீதி உறங்கலாமா?

‘என் மீதான வழக்கில் சதியும் விதியும் சதிராடியதால் இடையில் நீதி உறங்கிவிட்டது’ - அம்மா.

உண்மை...உண்மை...உண்மை. 

நீதி உறங்கியதால், நடக்கக்கூடாத எதுவெல்லாமோ நடந்துவிட்டது. 

மற்ற உயிர்களைப் போலவே மனிதனும் உறங்குகிறான்; மனித வடிவில் வாழும் நீதியரசர்களும் உறங்குகிறார்கள்; கடவுளின் ஓர் அம்சமான நீதியும் உறங்கியிருக்கிறது. 

உறங்கிய நீதி இப்போது விழித்தெழுந்துவிட்டது. இருப்பினும், விழித்துவிட்ட அது,  மறுபடியும் உறங்கிவிடக்கூடும் அல்லவா?

கூடாது. இனி ஒருமுறை நீதி உறங்கிவிடக்கூடாது. அதைத் தடுத்து நிறுத்துவது கடவுளால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று. அது கடவுளின் கடமையும்கூட.

“கடவுளே, இனி ஒரு முறை நீதியை உறங்கவிட்டு வேடிக்கை பார்க்காதே. எங்கள் இதயம் உடைந்து சிதறிவிடும்!”


=============================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக