எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 12 மே, 2015

உயிர்கள் உறங்கலாம். நீதி உறங்கலாமா?

‘என் மீதான வழக்கில் சதியும் விதியும் சதிராடியதால் இடையில் நீதி உறங்கிவிட்டது’ - அம்மா.

உண்மை...உண்மை...உண்மை. 

நீதி உறங்கியதால், நடக்கக்கூடாத எதுவெல்லாமோ நடந்துவிட்டது. 

மற்ற உயிர்களைப் போலவே மனிதனும் உறங்குகிறான்; மனித வடிவில் வாழும் நீதியரசர்களும் உறங்குகிறார்கள்; கடவுளின் ஓர் அம்சமான நீதியும் உறங்கியிருக்கிறது. 

உறங்கிய நீதி இப்போது விழித்தெழுந்துவிட்டது. இருப்பினும், விழித்துவிட்ட அது,  மறுபடியும் உறங்கிவிடக்கூடும் அல்லவா?

கூடாது. இனி ஒருமுறை நீதி உறங்கிவிடக்கூடாது. அதைத் தடுத்து நிறுத்துவது கடவுளால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று. அது கடவுளின் கடமையும்கூட.

“கடவுளே, இனி ஒரு முறை நீதியை உறங்கவிட்டு வேடிக்கை பார்க்காதே. எங்கள் இதயம் உடைந்து சிதறிவிடும்!”


=============================================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக