வெள்ளி, 15 மே, 2015

‘லக் சூ ரா உச் கே நீச், லக் சந் ரா உச் கே உச்’..... இவற்றிற்கு என்ன பொருள்?

ஜோதிடர்கள், நம்மை ஏமாற்றிப் பணம் பறிப்பதற்குக் கையாளும் ‘குழூக்குறிகள்’ இவை. இவற்றைப் பயன்படுத்தித்தான் ‘அவர்கள் சொல்லுவதெல்லாம் உண்மையே’ என்று  நம்ப வைக்கிறார்கள். ஜோதிடர்கள் செய்யும் இந்தக் கூட்டுச் சதியை அம்பலப்படுத்துகிறது  சு.மகேந்திரன் ​MA., M.Phil., (PhD) என்பார் எழுதிய ‘அறிவியல் பார்வையில் ஜோதிடம்’https://docs.google.com/document/d/1SM2FGK...M/preview என்னும் அறிவியல் கட்டுரை. படியுங்கள்.
#முன்னுரை:  
 ​கல்வி நிலையங்கள் மாணவர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கத் தவறிவிட்டனஅறிவியல் வளர்ச்சியையும் மிஞ்சும் அளவிற்கு மூடநம்பிக்கைகள் அறிவியல் முலாம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளனஅறிவியல் துறைகளில் பட்டங்கள் பெற்றவர்களில் பலரும்கூட மூடநம்பிக்கைகளில் மூழ்கிக் கிடப்பதைக் காண முடிகிறது

அறிவியல் துறை வளர்ச்சி பெற்று மண்ணையும் விண்ணையும் அளந்து பகுத்தாய்ந்துவரும் தற்காலத்திலும்சோதிட நம்பிக்கை நிலைப்பு பெற்று வளர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டுஅறிவியல் பார்வையில் சோதிடம் பற்றி ஆராய்வது மிகவும் தேவையானதாகும். 
   
பழங்காலத்தவர்கள் கோள்களை எப்படிக் கண்டுபிடித்தனர்
 ​
வானத்தில் விண்மீன்கள் இடம்பெயராமல் நிலையாக ஒரே இடத்தில் 
காட்சியளிப்பவைவிண்மீன்களைப் போன்றே தோற்றமளிக்கும் சில விண்பொருள்கள்(நகரும் விண்மீன்கள்ஒரு விண்மீன் கூட்டத்திலிருந்து மற்ற விண்மீன் கூட்டங்களுக்கு இடம்பெயர்வதைக் கண்டனர்அவற்றைக் கோள்கள்(கிரகங்கள்எனப் பெயரிட்டழைத்தனர்இந்தக் கோள்கள் பொதுவான விண்மீன்களைக் காட்டிலும் சற்றுப் பெரியவையாகக் காட்சியளிப்பதால் அவற்றை ஆண்டுக்கணக்கில் உற்றுநோக்க அவர்களுக்கு எளிதாக இருந்தனமற்ற விண்மீன்களைப் போன்றே சூரியனும் ஒரு விண்மீன்தான்எனினும் புவி சூரியனைச் சுற்றுவதால் புவியிலிருந்து பார்க்கும் போது சூரியன் ஒரு விண்மீன் கூட்டத்திலிருந்து மற்ற விண்மீன் கூட்டங்களுக்கு இடம்பெயர்வது போன்று தோன்றுவதால் சூரியனையும் ஒரு கோள் என்றனர்சந்திரன் புவியின் துணைக்கோள் என்றாலும் அதுவும் புவியிலிருந்து நோக்கும்போது இடம்பெயரும் வண்பொருள் என்பதால் அதனையும் கோள் என்றனர்ஆக புவியிலிருந்து பார்க்கும்போது கண்ணுக்குத் தெரிந்த இடம்பெயரும் விண்பொருள்களைக் கோள்கள் (கிரகங்கள்என்றனர்

சோதிடம் எப்படி உருவானது
 ​மனிதன் காலங்காலமாக வானத்திலுள்ள விண்மீன்களையும் கோள்களையும் 
பார்த்து வருகிறான்அப்போது பூமியில் தற்செயலாக சில நிகழ்வுகள் உண்டாகின்றன
சூரியன்சந்திரன்கோள்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க விண்மீன் கூட்டங்களுக்கு நேராக இருந்த போது ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வு நடந்தது என்ற தற்செயல் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டுஅதே போல அந்த இடங்களில் அந்தக் கோள்கள் இருக்கும்போது அந்த நிகழ்வு நடக்கும் என்ற கற்பனையால் உருவானதுதான் சோதிடம் ஆகும்அதாவது சூரியன்சந்திரன்கோள்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க விண்மீன் கூட்டங்களுக்கு நேராக இருந்த போது பிறந்து வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டுஅதே போல அந்த இடங்களில் அந்தக் கோள்கள் இருக்கும்போது பிறந்தவர்களின் வாழ்க்கையும் இருக்கும் என்ற கற்பனையால் சோதிடம் உருவானதுவிண்வெளி நிகழ்வுகளை நம்பிக்கையின் அடிப்படையில் மனித வாழ்க்கையின் நன்மை தீமைகளோடு தொடர்புபடுத்திக் கற்பனை செய்துகொண்டனர்

மனிதனின் வாழ்நாள் நிகழ்வுகளுக்கு வானில் வலம்வரும் சூரியன் சந்திரன் 
நிகழ்வுகளும்நகர்வுகளும் காரணம் எனக் கருதினர்வானில் சூரியன்சந்திரன் மற்றும் தெரிந்த சில கோள்களை விண்மீன்களுடன் தொடர்புபடுத்தி மனிதனின் பிறப்புவளர்ப்புகல்விதிருமணம்குழந்தைப்பேறுகெட்ட நிகழ்வுகள் போன்றவற்றை கணிக்கத் தொடங்கினர்பின் அதுவே ஒரு துறையாக உருவெடுத்து வளர்ந்தது.

சோதிடத்தின் பின்னணி1
  
வானியலும் சோதிடமும்
 “வானியல் (​Astronomy​என்பது விண்பொருட்கள் (அதாவது ​இயற்கைத் 
பேரடைகள்பற்றியும்அவற்றின் ​இயற்பியல், ​வேதியியல், ​கணிதம் மற்றும் 
படிப்படியான வளர்ச்சி பற்றியும்மற்றும் பூமிக்கும் அதன் காற்று மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளை உற்றுநோக்குவதிலும்விளக்குவதிலும் ஈடுபட்டுள்ள ஒரு அறிவியலாகும்2.  

பழங்காலத்தவர்களின் வானியல் சிந்தனையும்கோள்களின் நகர்வு பற்றிய கணக்கியல் சிந்தனையும் வியக்கத்தக்கவை. “​வானியல் (ASTRONOMY) என்பது வேறுசோதிடவியல் (ASTROLOGY) என்பது வேறுஇரண்டும் ஒன்றல்லமுன்னது அறிவியல்பின்னது மூடவியல் ஆகும்அதாவது போலி அறிவியல் ஆகும் (PSEUDO SCIENCE)”3. வானியல் சிந்தனையோடு கலந்துவிட்ட மூடநம்பிக்கைதான் சோதிடம். ​
ஆனால் இரண்டுமே கோள்களையும் விண்மீன்களையும் அடிப்படையாகக் கொண்டவைகோள்களின் நகர்வையும், ​இருப்பிடத்தையும் உற்றுநோக்குவதன் மூலமாகவும்கணக்கீடுகள் மூலமாகவும்கருவிகள் மூலமாகவும் கண்டறிந்து சொல்வது வானியல்வானியல் கணக்கீடுகளைப் பயன்படுத்திபிறந்த நேரத்தில் கோள்கள் எந்தெந்த விண்மீன் கூட்டங்களுக்கு நேராக இருந்தன என்பதைக் கொண்டு தனிமனிதர்களின் எதிர்காலத்தைச் சொல்ல முடியும் என்று சொல்வது சோதிடம்எடுத்துக்காட்டாக, 29 நாட்களுக்கு ஒருமுறை அமாவாசை வருவதைக் கணக்கிட்டுச் சொல்வது வானியல்அமாவாசையில் பிறந்தவரின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்வது சோதிடம்சூரியக் கிரகணம்சந்திரக் கிரகணம் ஆகியவை எப்போது தோன்றும் என்பதைக் கணக்கிட்டுச் சொல்வது வானியல்தான்வானியலையும்சோதிடத்தையும் ஒன்றெனக் கருதிக் குழப்பிக்கொள்ளக் கூடாது4
பஞ்சாங்கமும், சாதகக்குறிப்பும் வானியல் கணக்கீடுகளையும், சோதிட 
மூடநம்பிக்கைகளையும் ஒருங்கே கொண்டுள்ளவை ஆகும். 


சோதிடம் என்பது அறிவியலா
 ​
அறிவியல் என்பது ஏன் எதனால் எப்படி ஏதொன்றும் இயங்குகின்றது என்று உறுதியாக 
அறிவடிபடையில் அறிவதுஒன்றைப் பற்றிய ஒரு கருதுகோளை முன்வைத்துநேர்பட நிகழ்வுகளைத் துல்லியமாய்ப் பார்த்துதரவுகளைப் பெற்றுபலமுறை பரிசோதித்து முடிவுகளைக் கண்டுபிடித்து நிறுவுவதே அறிவியல் வழிமுறைஇதன் அடிப்படையில் ஒன்றைப் பற்றிய ஒரு பொதுக் கோட்பாடு உருவாக்கப்படும்சோதிடம் அறிவியல் அணுகுமுறைப்படி நிறுவப்பட முடியாததுகாரணம் அதற்கு அறிவியல் அடிப்படை கிடையாது5சோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் நம்பிக்கையின் அடிப்படையிலும்,ஊகத்தின் அடிப்படையிலும் உருவாக்கப்பட்டவைஅவை பரிசோதனைக்கு உட்படுத்தி அறிவியல் முறையில் ஆராய்ந்து நிறுவப்பட்ட ஆய்வு முடிவுகள் அல்லஎனவே சோதிடம் என்பது அறிவியல் அல்லஅது போலி அறிவியல்அதாவது மூடநம்பிக்கை 
ஆகும்

சமயம் சார்ந்த நம்பிக்கைகளும் சோதிடத்தில் சேர்ந்து கொண்டனஎனினும் 
துன்பப்படும் வேளையில் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தந்துசில மனிதர்களை மன அழுத்தத்திலிருந்து மீட்கும் ஓர் உளவியல் மருத்துவம் போலச் சோதிடம் உள்ளது"கோள்களின் கதிர்வீச்சு எல்லா உயிரினங்களின் நடத்தையிலும், வளர்ச்சியிலும் தாக்கத்தைச் செலுத்துகிறது" என்பது ஆழமான, நுட்பமான அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியது ஆகும். 
  
சோதிடத் தொழில்

நம் பிரச்சினைகளுக்கு யாராவது வழிகாட்டமாட்டார்களாஉதவிக்கரம் 
நீட்டமாட்டார்களாஎன்ற பரிதவிப்பிலும்நம் வெற்றி தோல்வி நம் கையில் இல்லையாரோதான் காரணம் என்ற தன்னம்பிக்கைக் குறைவாலும்மக்கள் சோதிடர்களை நாடிச் செல்கின்றனர்சோதிடர்கள் தங்களிடம் வருபவர்களின் மனநிலை அறிந்து அதற்கேற்ப ஆறுதலும்அவர்களுக்குத் தற்காலிக மகிழ்ச்சியையும் மனநிறைவையும் பேச்சுத்திறமையால் ஏற்படுத்திஅவர்களது இயலாமையைப் பயன்படுத்திப்பரிகாரம் ஏதாவது சொல்லிப் பணம் சம்பாதிக்கப் பயன்படும் தொழிலாகச் சோதிடம் உள்ளது6
 சோதிடர்கள் தாம் கூறும் குறியைக் குறிகேட்பவர் நம்ப வேண்டும் என்பதற்காகச் சாதகரின் உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர்பெற்றோரின் உடன்பிறந்தவர்கள் எத்தனை பேர்பாட்டன் பாட்டி முதலியோர் உயிருடன் உள்ளனராஇறந்துவிட்டனராபோன்ற விவரங்களையும்வாழ்க்கையில் நடந்து முடிந்த சில இன்பதுன்ப நிகழ்வுகளையும் மிகச் சரியாகச் சொல்வர்அந்தக் குறிகேட்பவரோ இந்தச் சோதிடர் சொல்வது அத்தனையும் மிகச் சரியாக உள்ளதே எனக் கருதிமிகவும் வியந்துபோய் அந்தச் சோதிடரைக் கடவுள் போலவே நம்பிவிடுகிறார்அது எப்படி என்றால்அந்தக் குறிகேட்பவர் ஏற்கெனவே பல சோதிடர்களை அணுகியிருப்பார்அந்தச் சோதிடர்கள் தந்திரமாக தமது பேச்சுத் திறமையால் குறிகேட்பவரின் ஏமாளித்தனத்தைப் பயன்படுத்திஅவரின் வாயைக் கிளறி அறிந்துகொண்ட விவரங்களைச் சாதகக் குறிப்பின் ஒரு பகுதியில் ​துருவக் கணிதம் அல்லது வள்ளுவர் கணிதம் என்ற தலைப்பிட்டோ, தலைப்பிடாமலோ சோதிடர்களுக்கு மட்டுமே புரியும்படியான எண்கள் மற்றும் இரகசிய எழுத்துக்கள் மூலமாக (அதாவது குழூஉக்குறி மூலமாக) குறித்துவிடுவர். அல்லது சாதகரின் வாழ்க்கைப் பின்னணியை நன்கறிந்த உள்ளூர் சோதிடர் அவற்றை இரகசிய எழுத்துக்கள் மூலமாக சாதகக்குறிப்பில் குறித்துவிடுவார். அவற்றைப் பார்த்துதான் பின்னர் சந்திக்கும் சோதிடர்கள் நடந்து முடிந்த விவரங்களைச் சரியாகக் கூறிவிடுகின்றனர்.  

எடுத்துக்காட்டாக, 
     லக் சூ ரா உச் கே நீச், 
     லக் சந் ரா உச் கே உச் 
என்பதன் பொருள்: லக்-லக்கினம்-சாதகர், சூ-சூரியன்-தந்தை, சந்-சந்திரன்-தாய், 
ரா-ராகு-பாட்டன், கே-கேது-பாட்டி, உச்-உச்சம்-உயிருடன் உள்ளார், 
நீச்-நீச்சம்-இறந்துவிட்டார். அதாவது, சாதகருடைய தந்தைவழி பாட்டன் உயிருடன் 
உள்ளார், பாட்டி இறந்துவிட்டார். சாதகருடைய தாய்வழி பாட்டனும் உயிருடன் உள்ளார், 
பாட்டியும் உயிருடன் உள்ளார் என்பது மேற்கண்ட குழூஉக்குறி எழுத்துக்களின் 
பொருளாகும். 

முடிவுரை: 
 ​ஒன்றை அதன் உண்மைத் தன்மைக்கு எதிராகச் சரி என்றோ அல்லது பலன்களுக்கு எதிராகப் பலன் தரும் என்றோ நம்புவதை மூடநம்பிக்கை எனலாம்# 
****************************************************************************************************************************************************
முனைவர் சு.மகேந்திரன் அவர்களுக்கு நன்றி.
கட்டுரையை, உள்ளவாறே பதிவு செய்திருக்கிறேன். திருத்தம் ஏதும் செய்யவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக