ஞாயிறு, 17 மே, 2015

‘ஆத்மா’ இருப்பது உண்மையா? புத்தரின் பதில்!

சமர்ப்பணம்: அண்மைக் காலங்களில் நூற்றுக்கணக்கில்[???] தற்கொலை புரிந்து, வான வெளியில் ஆவிகளாய், பூதங்களாய், பேய்களாய்  அலைந்துகொண்டிருக்கும் அப்பாவித் தொண்டர்களுக்கு!!!
“ஆத்மா சாவதில்லை” என்கிறார்கள்.

நம் எண்ணக் கூட்டங்களும் அனுபவங்களும் ஆத்மாவில் பதிவாகின்றனவா? இவை ஒன்று திரண்டு ஒரு நூல்பந்தைப் போல ஆகி, மனிதன் சாகும்போது மனித உடம்பிலிருந்து பிரிந்துவிடுகிறதா?

பிரிந்து எங்கே செல்கிறது? அந்தரத்தில் சுற்றி அலைந்துவிட்டு, என்றோ ஒரு நாள் வேறொரு உடம்புக்குள் புகுகிறதா? இதற்கான காலக்கெடுவெல்லாம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா?

இன்னொரு உடம்புக்குள் அது புகுவது எப்படி? ஏன் புகுகிறது?

நம் அறிவியல் இதற்கெல்லாம் விளக்கம் தரவில்லை. ஞானிகளும் யோகிகளும்[சொல்லப்படுகிறவர்கள்]தான் இது பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். 

மெய்யறிவு பெற்ற புத்தரைக் கேட்போம்.

அவர் சொல்கிறார்: “நஞ்சு தோய்க்கப்பட்ட அம்பு பாய்ந்த ஒருவன், புண்ணைக் குணப்படுத்துவதற்கு மருத்துவரை அணுகாமல், ‘இது எங்கிருந்து வந்த அம்பு? வடக்கிலிருந்தா, தெற்கிலிருந்தா? இதை எய்தது யார்? அவர் உயரமானவரா, குள்ளமானவரா? கறுப்பனா, வெள்ளையனா?’ என்றிவ்வாறு விசாரித்துக்கொண்டிருந்தால் விடை கிடைப்பதற்குள் அவன் இறந்துவிடுதல் நிச்சயம். எனவே, சுக வாழ்வுக்குப் பயன்படாத எவை பற்றியெல்லாமோ யோசித்துக்கொண்டிராமல் நிம்மதியாய் வாழ்ந்து முடிப்பதற்கான வழிகளைத் தேடுவோம். இதுவே அறிவுடை ஆகும்”

=============================================================================================

நன்றி: டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி. நூல்: ‘எண்ணங்கள்’, 31 ஆம் பதிப்பு, 1995; கங்கை புத்தக நிலையம், சென்னை.]




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக