சனி, 7 ஜூன், 2025

கடும் எச்சரிக்கை... வடக்கன்களுடன் ‘கூட்டு’ தமிழினத்திற்கு ‘வேட்டு’!!!

2026இல் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, தமிழ்நாட்டிலுள்ள ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் முனைப்புடன் களத்தில் இறங்கியுள்ளன.

மற்றக் கட்சிகளுடன் ஒப்பிடும்போது, அதிகாரப் பலத்துடன் அதீதப் பண பலமும்[கோடி கோடி கோடி கோடியோ கோடி] பெற்றுள்ள ‘பாஜக’, ஆளும் ‘தி.மு.க.’வுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் தன்வசப்படுத்துவதில் தீவிரம் காட்டுகிறது[இன்று அமித்ஷா தமிழ்நாடு வருவது கட்சித் தலைவர்களுடன் பேரம் பேசுவதற்காகவே].

எதிர்க்கட்சிகளில், பணபலமும் பெருமளவில் தொண்டர் எண்ணிக்கையும் கொண்டது ‘அதிமுக’ என்பது யாவரும் அறிந்ததே.

இக்கட்சி தவிர, ‘பாமக’[அன்புமணி அணி], ‘தேமுதிக’, ‘அமமுக’, ‘தவெக’, 'ஓபிஎஸ்'[ஒற்றை நபர் கட்சி] ஆகியவையும் ‘பாஜக’ அணியில் இணைந்துவிட்டதற்கான அறிவிப்பு.....

தனித்தனியாக இதன் தலைவர்களுடன் அமித்ஷா நடத்தும் ‘பேரம்’ முடிந்தவுடன், சில தினங்களில் வெளியாகக்கூடும்.

இந்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு, தமிழர் நலனில் பெரிதும் அக்கறைகொண்ட இணைய எழுத்தாளனான நான், மேற்குறிப்பிட்ட கட்சிக்காரர்களை[பாஜக நீங்கலாக] மிகக்  கடுமையாக எச்சரிக்க விரும்புகிறேன்.

‘பாஜக’வினர்[குறிப்பாக, மோடி. அமித்ஷா போன்ற அதன் தலைவர்கள்] இந்தி வெறியும் ஆதிக்க வெறியும் கொண்டவர்கள் என்பது 100% உண்மை[ஏராளமான ஆதாரங்கள் உள்ளன> தளத்தில் இடம்பெற்றுள்ள இந்தித் திணிப்பு குறித்த புள்ளிவிவரப் படம் காண்க].

தன்மானத்திடனும் முழுச் சுதந்திரத்துடனும் வாழ்ந்திட விரும்பும் தமிழர்களை, தமிழ்நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவதன் மூலம் அடிமைகளாக்கி, மொழியையும் இனவுணர்வையும் அழித்தொழிப்பதே இவர்களின் திட்டம்[இது வழக்கமாக என் பதிவுகளில் இடம்பெறும் எச்சரிக்கைதான்].

இந்தவொரு திட்டத்துடன்தான் எடப்பாடியார் முதலானவர்களை விலைபேசி நிரந்தர அடிமைகளாக்க இருக்கிறார்கள் மேற்கண்ட ‘பாஜக’ தலைவர்கள்.

இந்த அவலமானதும் ஆபத்தானதுமான சூழ்நிலையில் மேற்கண்ட கட்சியினருக்கு[‘பாஜக’ தவிர] அடியேன் செய்யும் எச்சரிக்கை.....

“பாஜக’வுடன் இணைந்து 2026 தேர்தலில் வென்று, ஆட்சியைக் கைப்பற்றி, அதில் ‘பாஜக’வினருக்கும் பங்களிப்பீர்களேயானால், அது தமிழர்களுக்கு நீங்கள் செய்த மாபெரும் துரோகமாக அமையும். வெற்றியோ தோல்வியோ தமிழின உணர்வுள்ள கட்சிகளோடு மட்டும் இணைந்து போட்டியிடுங்கள்; ‘பாஜக’வின் சூழ்ச்சிக்குப் பலியாகாதீர்கள்!”