நான் விஞ்ஞானி அல்ல;
ஞானியும் அல்லேன்.
'என் கடன் பணி செய்து கிடப்பதே'
என்று
காலமெல்லாம் களப்பணி ஆற்றும்
கருணாமூர்த்தியும் அல்லேன்.
ஓவியம் படைத்தோ காவியம் இயற்றியோ
ஆடலும் பாடலும் நிகழ்த்தியோ
மாந்தரை மகிழ்விக்கும் நல்ல
கலைஞனும் அல்லேன்.
'நான்' வெகு சாமானியன்;
'நான்' வெகு சாமானியன்;
சாதிக்கும் திறன் இல்லாதவன்
என்பதை அறிந்திருந்தும்
என்பதை அறிந்திருந்தும்
கோடானுகோடி உயிர்கள் தன்
கைவசம் இருக்க
இம்மண்ணில்
''நீயும் இனவிருத்தி செய்;
உன்னால் சாதிக்க முடிந்தது
அது மட்டுமே'' என்று
உன்னால் சாதிக்க முடிந்தது
அது மட்டுமே'' என்று
இங்கு என்னை அனுப்பிவைத்த
அவன்.....
ஓர் 'அரைக் கிறுக்கன்'.
நான் கேட்கும்
எந்தவொரு கேள்விக்கும் விடையில்லை
என்பது தெரிந்திருந்தும்.....
''யாரவன்?
அவன் எப்படி இருப்பான்?
என்னைப் படைத்து வழிநடத்தும்
அதிகாரத்தை
அதிகாரத்தை
அவன் எங்கே பெற்றான்?
எப்படிப் பெற்றான்?
பெற்றுத் தந்தவர் யார்?''
என்றெல்லாம் கேள்வி எழுப்பித் திரியும்
நான்.....
ஒரு முழுக் 'கிறுக்கன்!
இரசித்தேன் நண்பரே வார்த்தையின் ஜாலத்தை...
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
நீக்கு!!!☺️
பதிலளிநீக்குநன்றி நண்பரே.
நீக்குசெம அறுவை.
பதிலளிநீக்கு'அறுவை'...சரி. 'செம'வைத் தவிர்த்திருக்கலாம்!
நீக்குஇது மாதிரி நாலு கவிதை படிச்சா படிக்கிறவனும் கிறுக்கன் ஆயிடுவான்.
பதிலளிநீக்குஇது போன்ற கவிதைகள் இனி அடிக்கடி வரக்கூடும். விழிப்புடன் இருங்கள்!
நீக்குநன்றி.
சோதித்தல்.
பதிலளிநீக்கு