ஞாயிறு, 17 ஜூன், 2018

'இது'க்கு மட்டும்தான் பட்டியலா? 'அது'க்கு.....?!

*உடலுறவில் முழு மன நிறைவு பெறுபவர்களுக்குப் பிறரைக் காட்டிலும், 'இம்யூனோக்ளோபுளின்[IgA]' என்னும் நோய் எதிர்ப்புப் பொருள் உடம்பில் அதிகரிக்கிறது.

*உற்ற துணையுடன் அடிக்கடி கட்டில் சுகம் அனுபவிப்பவர்கள்,  'எனக்கு உடம்பு சரியில்லை' என்று  அலுவலகத்தில் அடிக்கடி விடுப்புக் கேட்பதில்லை.

*உடலுறவு இன்பத்தின் உச்சியில் வெற்றிக்கொடி நாட்டுபவர்களுக்கு, உச்சசுகம் பெருகுவதற்குக் காரணமான 'டோபமைன்', 'என்டார்ஃபின்','ஆக்ஸிடோசின்' ஆகியவை இயல்பைவிடவும் ஐந்து மடங்கு அதிகம் சுரக்கிறது.

*மனம் கவர்ந்த மனையாளின் தேன் ஊறும் இதழ்களில் ஆழப்பதித்திடும் ஒரே ஒரு முத்தம்கூட ஆக்ஸிடோசின் சுரப்பை அதிகரிக்கிறது.

*இம்மாதிரியான சுகபோகிகளுக்குத் தலைவலியே வருவதில்லையாம்; வந்த தலைவலியும் சுகபோகத்திற்குப் பிறகு பஞ்சாய்ப் பறந்துவிடுமாம்.[உங்களின் மனம் கவர்ந்தவள், ''தலை வலிக்குதுங்க'' என்று சொன்னால் 'தேமே' என்று இருந்துவிடாதீர்கள்].

*தினசரி நடைப்பயிற்சியை மறந்தாலும், வாரம் ஒருமுறையோ இருமுறையோ இந்தப் பயிற்சியைத் தவறவிடாமல் செய்தால், மருத்துவச் செலவை முற்றிலுமாய்த் தவிர்த்துவிடலாம்.

*உடல் தகுதிக்கேற்ப முறையான உடலுறவு வைத்துக்கொண்டால், 'சிக்ஸ்பேக்' உடம்பு வாய்க்கவில்லை என்றாலும் அதைச் 'சிக்'கென்று வைத்துக்கொள்ளலாம்.

*மாதத்தில் ஒருமுறை புணர்வதை விடவும் இருமுறை புணர்வோரை இதய நோய் நெருங்காது.

*அடிக்கடி விந்தை வெளியேற்றுவோரின் 'பிராஸ்டேட்' சுரப்பி வீங்காது; அதில் புற்று நோய் தொற்றாது.

*பெண்களுக்கு மாதவிடாய்ப் பிரச்சினை தலைகாட்டாது; வலியும் தென்படாது.

*சிறப்பான உடலுறவு, சிறுநீர்ப்பையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

*நீண்ட நேர உடலுறவில் சுரக்கும் வேதிப்பொருட்கள் மூளையைச் சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்; நினைவுத்திறன் கூடும்.

*குறைந்த இடைவெளியில் தொடரும் உடலுறவு, செரட்டோனின் என்னும் 'ஹேப்பி ஹார்மோனை'ச் சுரக்கச் செய்து எப்போதும் மகிழ்ச்சியில் திளைக்கச் செய்யும்.

*உற்சாகமான உடலுறவு, தனிமை, பாதுகாப்பின்மை, மன அழுத்தம், சோர்வு போன்றவற்றை ஓட ஓட விரட்டியடிக்கும்.....['பெண் இன்று', தி இந்து, 17.06.2018]
இவையும் இவைபோன்ற இன்னும் ஏராள நன்மைகளும் இணக்கமான இணையுடன் அடிக்கடி புணர்ச்சி கொள்வதால் விளைகின்றன என்னும் உண்மையை மனிதவள மேம்பாட்டு  நிறுவனம் ஒன்று, பன்னாட்டு நிறுவனப் பணியாளர்களிடையே நடத்திய ஆய்வை அடிப்படையாகக் கொண்டு உறுதிப்படுத்தியிருக்கிறதாம்.

''ஆகா, என்ன அருமையான ஆராய்ச்சி!'' என்று பாராட்டத் தோன்றுகிறதா, கொஞ்சம் பொறுங்கள்.

ஜோதிடம், வரதட்சணை, சாதிமத வேறுபாடுகள் என்று பல்வேறு தடைகளைத் தாண்டித் துணை தேடிக்கொள்ள வக்கில்லாமல், நாளும் ஏங்கித் தவிக்கும் முதிர்கன்னிகள், முதிர்காளையர் எண்ணிக்கை பெருகிக்கொண்டே போகிறது.

கல்யாணம் ஆகியும், உடல் பொருத்தமும் மனப் பொருத்தமும் இல்லாமையால் உடலுறவுக் குழறுபடிகளுக்கு ஆளாகி மனம் சோர்ந்து நடைப்பிணங்களாய்க் காலம் தள்ளும் கணவன் - மனைவியர் எண்ணிக்கை கணக்கு வழக்கில்லாமல் பெருகிக் கிடக்கிறது.

அனைத்துப் பொருத்தங்களும் இருந்தும், தீராத நோய் ஆறாத மனத் துயரம் என்று அல்லல்பட்டு ஆற்றாத கவலையுடன் காட்சிதரும் காளையர், கன்னியர் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

விட்டுக்கொடுத்து வாழும் மனப் பக்குவமோ, பாசத்தைக் கொட்டி உறவாடும் நேச உணர்வோ இல்லாத காரணத்தால், மணமான குறுகிய காலத்திலேயே மணவிலக்குப் பெற்று மாளாத துன்பங்களுக்கு ஆளாவோர் எண்ணிக்கையும் பல்கிப் பெருகுகிறது.

கட்டுப்பாடில்லாத சம்போகத்தால் நாடி தளர்ந்து நடைப்பிணங்களாய்க் காலம் தள்ளுவோரையும் கணிசமாய்க் காண முடிகிறது.

மனத்தளவில் ஏராள ஆசையிருந்தும் உடல் ஒத்துழைக்காத காரணத்தால் ஓயாது புலம்பித் திரியும் கிழடுகளுக்கும்[கிழவிகள்?] பஞ்சமில்லை.

இங்கே குறிப்பிடப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கூட்டிப் பெருக்கிக் கழித்துவிட்டு, மனம் ஒத்த தம்பதியராய் உடலுறவு சுகம் துய்ப்போரின் எண்ணிக்கையைக் கணக்கிட்டால்.....

லட்சத்தில் ஒன்று தேறுமா?

லட்சத்தில் ஓர் இணைதான் மேலே பட்டியலிடப்பட்ட பயன்களைப் பெற முடிகிறது என்னும்போது, மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மேற்கொண்ட ஆராய்ச்சியைப் பாராட்ட முடியுமா?

முடியாது. மாறாக.....

'ஆராய்ச்சியாளர்களே,

நீங்கள் மனித நலனை மேம்படுத்தப் பாடுபடும் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். உங்களால் முடிந்தால் மக்களிடையே பெருகிக் கிடக்கும் பல்வேறு மனநோய்களையும் உடல் குறைபாடுகளையும் குணப்படுத்த உதவுங்கள். 

இவர்களின் நிலை மேம்படட்டும். நீடித்த உறவுக்குத் தகுதி படைத்தவர்களாக  இவர்கள் மாறட்டும். அதன்பிறகு.....

நீடித்த உறவால் விளையும் பயன்கள் குறித்த உங்களின் ஆராய்ச்சி முடிவை இவர்களுக்குப் பரிந்துரை செய்யலாம்.'
------------------------------------------------------------------------------------------------------------------










6 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்று அன்பால் இணையும் தம்பதிகள் குறைவு இதன் காரணமே விரைவில் விவாகரத்து.

      மனதளவில் இன்றைய மனிதர்களுக்கு குணப்படுத்த வேண்டிய அவசியத்தில் வாழ்கிறோம்.

      நீக்கு
    2. அன்பின் வலிமையை உணராமல் கவர்ச்சிக்கு அடிமையாகும் பலவீனமே தாம்பத்தியச் சிக்கல்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் திரைப்படத் துறையினரும் இது விசயத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

      நன்றி நண்பரே.

      நீக்கு