வியாழன், 27 ஜூன், 2024

கிரஹங்கள் ஒன்பதல்ல, பத்து[+மோடி]!!!

சுற்றுலா வசதியை மேம்படுத்த நடுவணரசு உருவாக்கிய திட்டம்தான் ‘பிரசாத்’[நடிகர் பிரசாந்த் நினைவுக்கு வருகிறார்!].

இத்திட்டம், சுற்றுலா வசதிகளை மட்டும் மேம்படுத்துவதாயின் வரவேற்கத்தக்கதே.

இத்திட்டத்தின்படி, தமிழ்நாடு மாநிலத்திலும், புதுச்சேரியிலும் உள்ள 9 நவக்கிரஹக் கோயில்கள் இடம்பெற்றுள்ள பகுதிகளின் மேம்பாட்டுக்காக நடுவணரசு ரூ17.53 கோடி ஒதுக்கியுள்ளதாம்[படம்].


அறிவியல் வளர வளர, தாங்கள் சுமந்து திரியும் ஏராள மூடநம்பிக்கைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகவேனும் மக்கள் விடுபடுவதே விரும்பத்தக்கதாகும்.

சூரியன், சந்திரன், புதன்,  செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன், இராகு, கேது என்று சொல்லப்படும் நவக்கிரகங்களை நம்புவது அறிவுடைமையாகுமா? “அல்ல” என்பது அடியேனின் எண்ணம்.

இவற்றை மேம்படுத்துகிறோம் என்று சொல்லிக் கோடிகளில் ரூபாய்களை வீணடிக்கலாமா?[குழு அமைத்து இவற்றை வேறு வகையில் பயன்படுத்துவது பற்றித் திட்டமிடலாம்] “கூடவே கூடாது என்பது நம் பதில்.

“நவக்கிரகங்கள் என்பவை நம்பி வழிபடத்தக்கத் தெய்வங்களே. அவற்றிற்கென்று கோடிகளில் பணம் செலவிடுவது மிகவும் பயன் தருவதே” என்று நம் மக்கள் அனைவரும் நம்புவார்களேயானால்.....

கோயில்களில் நவ[9]க்கிரஹங்களுடன் பத்தாவது[கிரஹங்கள் 10] கிரஹமாக மோடி[கடவுளால் அனுப்பப்பட்ட கிரஹம்]யின் சிலையை இடம்பெறச் செய்யலாம்.

பத்துக் கிரஹங்களையும் வழிபட்டு அவற்றின் அருள் பெற்றுப் பெரும் பயன் அடையலாம்; மரணத்திற்குப் பின்னர் ‘நற்கதி’ பெறலாம்!

போற்றி போற்றி! பத்துக் கிரஹங்கள் போற்றி!!