சனி, 1 ஜூன், 2024

தொடரும் தியானம்! மோடியின் உள்நோக்கம் என்ன?

#பிரதமரின் தியானம்[விவேகானந்தர் மண்டபத்தில்] இன்னும் தொடர்கிறது. அவர் நாளை மதியத்துக்குப் பின்னர் கரை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது#

மேற்கண்டது ஊடகச் செய்தி.

இந்தச் செய்தி நம் நெஞ்சில் மிகப் பெரும் சந்தேகத்தைத் தோற்றுவித்தது.

தேர்தல்தான் முடிந்துவிட்டதே, அப்புறம் எதற்கு இந்தத் தொடர் தியானம்?

மக்கள், இந்தியா கூட்டணிக்கு[மோடிக்கு எதிராக] அதிக அளவில் வாக்களித்திருந்தால், தன்னுடைய இந்தத் தொடரும் தியானத்தை மெச்சி, எதிரணிகளுக்குப் போடப்பட்ட அத்தனை வாக்குகளையும்[அல்லது, தேவையான அளவுக்கு] பாலராமர் ‘பாஜக’வுக்கான வாக்குகளாக இடம்பெயரச் செய்வார் என்று நம்புகிறாரா மோடி?

அல்லது,

விதம் விதமான பக்தி வேடம் புனைந்து தியானத்தில் ஈடுபட்டது, தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக அல்ல என்று மக்களை நம்பச் செய்வதற்காகவா?

காரணம் எதுவாகவோ இருந்து தொலைக்கட்டும், மோடி கட்சி படுதோல்வி கண்டது என்னும் செய்தி ஜூன்4ஆம் தேதிக்குப் பிறகு தெரியவந்தால், மோடி அவர்களுக்கு நாம் வழங்கும் பரிந்துரை…..

வாழ்நாள் முழுதும் விவேகானந்தர் மண்டபத்திலேயே தொடர்ந்து ஆழ்மன தியானத்தில் அவர் ஈடுபடலாம்.

ஈடுபட்டால்.....

எப்போது வைகுண்டத்திற்கான ஆன்மிகப் பயணத்தை அவர் மேற்கொண்டாலும், பாலராமனின் அருளால் அங்கே அவருக்கு ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கும் என்பது உறுதி!

வாழ்க மோடி! வளர்க அவரின் பாலராமர் பக்தி!!

*   *   *   *   *

https://www.dinamalar.com/templenews/144031