வியாழன், 30 மே, 2024

மோடி நாடறிந்த ஓர் ஆண்டி???

பிரதமர் மோடி டெல்லியில் இருந்து விமானம் மூலம் 30ஆம் தேதி மாலை திருவனந்தபுரம் வருகிறார்; அங்கிருந்து கன்னியாகுமரிக்கு  வருகை புரிகிறார்.

அங்குள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் 31ஆம் தேதி தியானம் செய்கிறார்# -இது ‘நக்கீரன்’ செய்தி.

மோடி இந்த நாட்டின் பிரதமர் மட்டுமல்ல, ஓர் ஆன்மிகவாதியும்கூட.

பிரதமர் பதவி என்பது நாட்டை ஆளுவதற்கானது. ஆன்மிகம் தன்னலம் சார்ந்தது.

பிரதமராக வெளியே செல்லும்போது, பயணத்திற்கு உரிய வசதிகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தேவை. ஆன்மிக&ஆசாபாசப் பயணங்களின்போது இயன்றவரை அவற்றைக் குறைப்பது ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களின் கடமை.

கோயில் தவறாமல் தரிசனம், சாமி சிலை கண்டால் விழுந்து கும்பிடுவது, மலைக் குகைகளைத் தேடிப்போய்க் கண்மூடித் தியானம் என்றிவற்றிற்காக, இவர் எங்கெல்லாம் பயணம் போகிறாரோ அங்கெல்லாம் பாதுகாப்புப் படை போகிறது; படமெடுத்து ஊடகங்களில் வெளியிட அதிநவீனப் புகைப்படக் கருவிகளும் போகின்றன.

சுருங்கச் சொன்னால், இவர் அரசு அலுவல்களுக்காகச் செலவிடும் நேரத்தைக் காட்டிலும், ஆன்மிகச் சுற்றுலாவுக்கு[உலகம் சுற்றுவதற்கும்தான்] அதிக நேரம் செலவிடுகிறார்; இதற்கான செலவும் அதிகம்.

இவர் மனசாட்சியுள்ள மனிதர் என்றால், நான்கு சுவர்களுக்குள்ளேயோ தனித் தீவுகளுக்குச் சென்றோ இவற்றைச் செய்யலாம். இந்த அற்ப விசயம்கூட ஒரு நாட்டின் பிரதமருக்குத் தெரியாதது பேரதிசயம் ஆகும்.

ஆக, இவரின் செயல்பாடுகள் மூலம் நாம் அறிந்துகொள்ளத்தக்க அதிர்ச்சி தரும் எதிர்கால நிகழ்வு ஒன்று உண்டு. அது.....

மோடி மீண்டும் இந்த நாட்டின் பிரதமராக ஆட்சிபீடம் ஏறினால், இந்த இந்திய நாடு அறிவாளர்கள் பெருமளவில் வாழும் நாடாக இல்லாமல், ஆண்டிகள் கொட்டமடிக்கும் தேசமாக மாறும் என்பது திண்ணம்!

* * * * *

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/dmk-emphasis-pm-modi-meditation-program-should-be-cancel