எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 29 ஜூன், 2024

தெரிந்தால் பேசு! தெரியாவிட்டால் பொத்திகிட்டு.....?

 

ஆன்மிகர்: “கடவுள் இருப்பது உண்மை. சக்தி வடிவமானவர் அவர். அனைத்தையும் படைத்தவர்; அருள்மழை பொழிந்து உயிர்களைக் காப்பவரும் அவரே.....


பாவிகளைத் தண்டிப்பார்; பரம யோக்கியர்களைப் பாதுகாப்பார்.....


அவரைத் தொழுதேத்தினால் துன்பங்களை நீக்கி இன்பங்களை வாரி வழங்குவார்.”


நாம்: “உங்கள் கடவுள் இதையெல்லாம் ஏன் செய்கிறார்?”


ஆன்மிகர்: “..... ..... ..... ..... .....”


நாம்: “பதில் தெரியவில்லைதானே?”


ஆன்மிகர்: “அது முழுமுதல் கடவுளான அவருக்கு மட்டுமே தெரியும்.”


நாம்: “அது அவருக்கு மட்டும்தான் தெரியும் என்றால், மேலே நீர் சொன்னவையெல்லாம் உமக்கு எப்படித் தெரிந்தது?”


ஆன்மிகர்: “..... ..... ..... ..... .....”


நாம்: முடிந்தால் மற்றவர்களுக்கு ஏதாவது நல்லது செய்யும். அதுக்கான நல்ல மனம் இல்லேன்னா கடவுள், ஆன்மா, பேய், பூதம்னு கண்ட கண்ட பொய்க் கதைகளைப் பரப்பி, மக்களுக்கு இருக்கிற கொஞ்சம் அறிவையும் சீரழிக்க வேண்டாம். பொத்திகிட்டுச் சொந்த வேலை இருந்தால் பாரும். வேலை எதுவும் இல்லேன்னா கிடைச்சதைத் தின்னுட்டுச் சும்மா கிடவும்.”

                               *   *   *   *   *

குறிப்பு:

பொத்திகிட்டு > ‘வாய்’ஐ மூடிக்கொண்டு! ஹி... ஹி... ஹி!!!