ஞாயிறு, 30 ஜூன், 2024

‘ஆட்டுத்தாடி’யைத் திட்டி மகிழ ஆசை! வழிதான் இல்லை!!

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பொறுப்பேற்றதிலிருந்து, ‘திமுக’ ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியாக ஆர்.என்.ரவியின் பேச்சுகளும், பேட்டிகளும் செயல்பாடுகளும் அமைந்திருப்பதை இந்த நாடே அறிந்திருக்கிறது.

தமிழ்நாட்டைத் ‘தமிழகம்’ என்பதே சரி என்று  பேசி, ‘தமிழ்நாடு’ என்று பெயர் மாறக் காரணமாக இருந்த அறிஞர் அண்ணா முதற்கொண்டு அத்தனைத் தமிழ்த் தலைவர்களையும் தமிழ் மக்களையும் அவமானப்படுத்தல்.

தமிழர் நலம் பேணிடத் தமிழ்நாடு அரசு வகுக்கும் திட்டங்களுக்கான மசோதாக்களைக் கிடப்பில் போட்டு, தமிழினத்தின் வளர்ச்சியைத் தடுத்தல்.

மக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் உருவாகக் காரணமானதும், அவர்களில் பலரும் பல வகைகளிலும் இழிகுலத்தர் ஆவதற்கு மூலகாரணம் ஆனதும் ஆன சனாதனத்தை, வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் போற்றிப் புகழ்தல்.

தமிழ்நாடு அரசின் நிர்வாகத்தில் தலையிடல்[ஊழல்கள் பல புரிந்த சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தருக்குப்[வழக்கு நிலுவையில் உள்ளது] பதவி நீட்டிப்பு வழங்கியது போன்றவை]


உலகப் பொதுமறை தந்த ஒப்பற்ற அறிவுலக மேதை திருவள்ளுவருக்குக் காவி ஆடை உடுத்து இழிவுபடுத்துதல் என்றிப்படியான, இந்தப் பெரிய மனிதரின் அடாவடித்தனங்களுக்கு நீண்டதொரு பட்டியலே போடலாம்.

தமிழ்நாட்டுத் தலைவர்களின் கண்டனங்களையோ மக்களின் எதிர்ப்பையோ இவர் பொருட்படுத்துவதே இல்லை.

இதற்கான துணிவை இவர் பெற்றிடக் காரணமானவர் யார் என்பது யாவரும் அறிந்ததே.

அங்கே அவரின் ஆட்டம் அடங்குவதற்கான நேரம் வரும்போதுதான் இங்கே இவன் அடிக்கும் கொட்டமும் அடங்கும் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.

அதுவரை, இவனைத் திட்டி மகிழ வேண்டும் என்னும் ஆசையை உள்மனதில் பூட்டி வைப்பதைத் தவிர வேறு வழியே இல்லை.

                                      *   *   *   *   *

மிக முக்கிய அறிவிப்பு:

வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் நிலையில், அவசர அவசரமாக எழுதப்பட்டது இப்பதிவு. திருத்தம் செய்ய நேரமில்லை என்பதால் இதில் மொழிப்பிழைகள் நேர்ந்திட வாய்ப்புள்ளது. பிழை காணின் பொறுத்தருளுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி!