புதன், 12 ஜூன், 2024

தமிழிசை[சௌந்தர்ராஜன்]க்குச் சுட்டு விரல் இல்லையா?!?!?!

//ஆந்திர மாநிலத்தில் பாஜக கூட்டணியில் வெற்றி பெற்று முதலமைச்சராகச் சந்திரபாபு நாயுடு இன்று பொறுபேற்றார். தலைவர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.

இந்த விழா மேடைக்கு வந்த தமிழிசை சௌந்தர்ராஜன், மரியாதை நிமித்தமாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது முகத்தைக் கடுமையாக வைத்தபடி தமிழிசையை அமித்ஷா கடிந்துகொண்டார். 

இந்த வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில், இணையதளங்களில் வேகமாகப் பரவிவருகிறது//


***இது தமிழர்களைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் செய்தி[காமதேனு, இந்து தமிழ்].


தமிழிசைக்கும் வடக்கன்களின் அடிமை அண்ணாமலைக்கும் இடையே 'அதிமுக'வுடனான கூட்டணி தொடர்பாகக் கருத்துவேறுபாடுகள் எழுந்தன.


இதனால், இவர்களுக்கிடையே விவாதம் நிகழ்ந்தது. இது வெறும் விவாதம் மட்டுமே. கண்டித்து அறிவுரை வழங்கும் அளவுக்குத் தமிழிசை அநாகரிகமாக நடந்துகொள்ளவில்லை.


உண்மை இதுவாக இருக்க, அமித்ஷா என்னும் மோடியின் அடிமை தமிழிசையைச் சுட்டு விரல் அசைத்து, உலகறியக் கண்டித்திருப்பதாகத் தெரிகிறது.


நமக்கான சந்தேகம் என்னவெனில்…..

“நானும் நீயும் ஒரே கட்சிதான். ஆனாலும், நீ எந்த வகையிலும் என்னைவிட உயர்ந்தவன் அல்ல. சுட்டுவிரல் அசைத்து என்னை மிரட்டுகிறாய். இனியொரு முறை இதைச் செய்தால் என்னிடம் அவமானப்படுவாய். ஜாக்கிறதை” என்று சுட்டு விரல் அசைத்து அந்த அடிமையைத் தமிழிசை கண்டித்திருக்க வேண்டும்.


அதை அவர் செய்யத் தவறியதால்…..


தமிழர்களுக்காக ஒரு துரும்பைக்கூட அசைத்திராத[கெடுதல்களே விளைந்துள்ளன] இந்த இந்திக்காரனிடம்[இந்தி வளர்த்துப் பலனடைந்த/அடையும் குஜராத்தி] தமிழ்ப் பெண்[தமிழிசை] அவமானப்பட்டதை எண்ணித் தமிமிழினமே தலை குனிந்து நிற்கிறது.


தமிழிசைக்கு நாம் அறிவுறுத்த நினைப்பது…..


“நீ செய்த தவறுக்காகத் தமிழர்களிடம் மன்னிப்புக் கேள் பெண்ணே.”

                                                                                                                                                   *   *   *   *   *

https://kamadenu.hindutamil.in/news/amitshah-scolds-tamilisai-on-andhra-government-swearing-in-ceremony-stage