செவ்வாய், 25 ஜூன், 2024

அரசியல் தலைவர்களில் ‘நம்பர் 1’ புத்திசாலி மோடி!!!

2024 தேர்தலில், மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களில் பலரும் அவரவர் தாய்மொழியில் உறுதிமொழியை வாசித்துப் பதவி ஏற்றார்கள் என்பது செய்தி[நகல் பதிவு கீழே].

விதிவிலக்காக, நாட்டின் பிரதமர் மோடி, தன் தாய்மொழியான குஜராத்தியைப் புறக்கணித்து, ‘இந்தி’ மொழியைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது நம்மைப் புருவம் உயர்த்த வைக்கிறது.

பெற்ற தாயைத் தெய்வத்திற்கு நிகராக மதித்து வாழ்ந்ததாக நம்பப்படும் மோடிக்கு, குஜராத் மொழி தன் தாய்க்கு நிகரானது என்பது தெரியாதா?

தெரிந்திருந்தும் இந்தியைப் பயன்படுத்தினார் என்றால், குஜராத்தியைவிட இந்தி தரம் வாய்ந்ததும் பயனுள்ளதுமான மொழி என்று கருதுகிறாரா?

‘ஒரே நாடு ஒரே மொழி[இந்தி]’ என்று பேசிப் பேசி இந்தியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழி’ என்னும் அரியணையில் அமர்த்தி அழகு பார்க்க ஆசைப்படுகிறாரா?

இப்படி ஆசைப்படுவது இந்தியின் மீதானா அளவிறந்த பற்றின் காரணமாகவா?

அல்ல, அல்ல, அல்லவே அல்ல.

இந்தியை, அவரும் அமித்ஷா முதலான அவரின் சகாக்களும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதற்கான ஒரே காரணம்.....

பதவி ஆசை ஐயா... பதவி ஆசை!

இந்தியில் பதவியேற்றதன்[பதவிப்பிரமாணம்] மூலம் இங்கு அதிக எண்ணிக்கையில்[எந்தவொரு ‘தனி’ மொழியைக் காட்டிலும்] உள்ள இந்தி மொழி பேசுவோரின் ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார் மோடி!

மோடி இப்போதுள்ள இந்திய அரசியல் தலைவர்களில் வேறு எவரையும்விட மகா புத்திசாலியாக்கும்!!