புதன், 26 ஜூன், 2024

இரட்டை வேடம் வேண்டாம் கோபிநாத்[எம்.பி.] தெலுங்கனே!!!

தமிழ்நாடு எம்.பி.க்கள் இன்று நாடாளுமன்ற மக்களவை, புதிய கட்டடத்தில் பதவியேற்றுக்கொண்டனர். அப்போது, கிருஷ்ணகிரி மக்களவை எம்.பி. கோபிநாத் தெலுங்கில் பதவியேற்றுக்கொண்டார்.

நிறைவாக, ஜெய் தமிழ்நாடு, வணக்கம் எனக் கூறி முடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது[https://tamil.indianexpress.com/] -இது நேற்றையச் செய்தி.

கிருஷ்ணகிரி தொகுதி நா.ம. உறுப்பினரும், கோபிநாத் என்னும் பெயர் கொண்டவருமான தெலுங்கனே,

தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் தெலுங்கன்களில்[திமுக. கட்சி உட்பட] பலரும் வெகு ஆழமான தெலுங்கு மொழிப் பற்றும், தெலுங்கர் இனப்பற்றும் கொண்டவர்களே என்பது எம்மைப் போன்ற கொஞ்சம் சிந்திக்கும் அறிவு படைத்த தமிழர்களுக்குத் தெரியும்.

பெரும்பான்மைத் தமிழர்களின் வாக்குகளைப் பெற்றுப் பதவிகள் பெறுவதற்கும் பணம் சம்பாதிக்கவும் வாயளவில் “தமிழ் வாழ்க” முழக்கம் செய்கிறார்கள் என்பதையும் நாங்கள் அறிவோம்.

அவர்களில் நீரும் ஒருவர்.

தேர்தல் பரப்புரைகளின்போது, தமிழர்களிடம்[வீடு வீடாகச் சென்று தெலுங்கர்களிடம் தெலுங்கில் பேசி வாக்குக் கேட்டீர்] தமிழில் வாக்குக் கேட்டு, தமிழர்களில் ஒருவனாக நடித்த நீர்.....

நாடாளுமன்றத்தில் தெலுங்கில் உறுதிமொழி ஏற்றதன் மூலம், நீர் ‘ஒரிஜினல் தெலுங்கன்’ என்பதைக் காட்டிக்கொண்டுள்ளீர்.

உம்முடைய மொழி&இனப் பற்றுக்காகத் தெலுங்கனான உம்மை ஒரு தமிழனாகப் பாராட்டுகிறோம்.

ஆனால்.....

உம்மை வாழ வைப்பதால் தமிழில் நன்றியும் வணக்கமும் ‘ஜெய் தமிழ்நாடு’ம் சொல்லிப் பொய் வேடம் தரித்திருக்க வேண்டாம் என்பது நம் எண்ணம்.

கிருஷ்ணகிரி என்னும் பெரியதொரு நாடாளுமன்றத் தொகுதியில் தெலுங்கர்களே பெரும்பான்மையினர் என்பதாகக் காட்டிக்கொள்ளும் முயற்சியே உம்முடைய மேற்கண்ட செயல்.

இந்த அயோக்கியத்தனத்தை நீர் செய்ததுதான் கண்டிக்கத்தக்கதாக உள்ளது.

ஆனாலும், உண்மையில் கண்டிக்கத்தக்கவர் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின்தான்.

தமிழ்நாடு காங்கிரஸ்காரர்கள் என்றாலே மற்றவர்கள் முதுகில்[திமுக] சவாரி செய்தே காரியம் சாதிப்பவர்கள் என்பது தெரிந்திருந்தும், கிஞ்சித்தும் தமிழ் மொழி&இன உணர்வில்லாத இவர்களுடன்[தனித்து நின்றால் 05% வாக்குகள்கூடக் கிடைக்காது] சுய லாபத்திற்காகக் கூட்டணி அமைக்கும் மு.க. ஸ்டாலின்தான் நம் கண்டனத்துக்குரியவர்.

இருப்பினும், உம்மைப் போன்ற, தமிழை அவமானப்படுத்தும் தெலுங்கன்களையோ, அவர்களின் உயிர்த் தோழரான ஸ்டாலினையோ கண்டிப்பதால் பயனேதும் இல்லை என்பதும் அறியத்தக்கது.

கண்டிக்கத்தக்கவர்கள் 'இளிச்சவாயர்'களான தமிழர்கள் மட்டுமே!