புதன், 5 ஜூன், 2024

தியானிச்சி பிரேமலதாவும் தியானன் நரேந்திர மோடியும்!!!

வழிபடும் கடவுளின் பெயரை, சப்பணமிட்டு அமர்ந்த கோலத்தில்  நிமிடக்கணக்கிலோ, மணிக்கணக்கிலோ, நாட்கணக்கிலோ உச்சரிப்பது ‘தியானம்’ எனப்படும்[மாறுபட்ட விளக்கங்களும் உள்ளன].

தியானம் செய்பவன் தியானன்; செய்பவள் தியானிச்சி.

ஆழ்நிலை தியானத்தின் மூலம் உலகோர் கவனத்தை ஈர்த்த தியானன் ரட்சகன் மோடி.

தியானிச்சி அன்னை பிரேமலதா.

நேரம் காலம் பார்க்காமல் தியானத்தில் ஈடுபட்டவர்கள் கடந்த காலங்களில் வாழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

நிகழ்காலத்தில் பிறவி ஞானி மோடி, அவ்வப்போதும் தொடர்ந்தும் தியானம் செய்து இது விசயத்தில் சாதனை புரிந்திருப்பது உலகறிந்த அதிசய நிகழ்வு.

ஆனால், அதன் மூலம் அவர் பெற்ற பலன்?

நானூறு தொகுதிக்கு ஆசைப்பட்டு இமய கிரி, கைலாயகிரி, கன்னியாக்குமரி என்று கண்ட கண்ட இடங்களிலெல்லாம் மணிக்கணக்கிலும் நாட்கணக்கிலும் தியானம் செய்தும் 241ஐத் தாண்ட இயலவில்லை.

இது அண்மைக்கால நிகழ்வுகளில் ஒன்று.

இன்னொன்று.....

மகனின் வெற்றிக்காகக் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் அமர்ந்து பிரேமலதா விஜயகாந்த் தியானம் செய்தார்[மாணிக்கம் தாகூர் முன்னிலை வகித்தபோது] என்பது.

பயன்?

அவர் மகன் தோல்வியைத் தழுவினார்.

அவர் வெற்றி பெற்றிருந்தால், இது தலைவி பிரேமலதா செய்த தியானத்தின் பலன் என்று ஊடகக்காரர்கள் கொட்டை எழுத்துகளில் செய்தி வெளியிட்டுக் குதூகளித்திருப்பார்கள். அம்மையாரும் ‘அவதாரப் புருஷி’[மோடி ‘அவதாரப் புருஷன்’] ஆகியிருப்பார்!

பாவம் பிரேமலதா! பாவம் மோடி!!


https://tamil.asianetnews.com/gallery/gallery/premalatha-vijayakanth-sat-in-meditation-for-the-success-of-her-son-mma-sejv5a#image4null