எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 2 நவம்பர், 2024

வடக்கன்களின் அடங்காத மொழிவெறி ஆட்டம்!!!

கீழ்க்காணும் விளம்பரம் இடம்பெற்றிருப்பது நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில்[நேற்று சுற்றுலா சென்றபோது பதிவு செய்யப்பட்டது].

ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் சாலைப் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டதற்கான விளம்பரம் இது.

இந்த விளம்பரத்திற்கு, ‘பிரதமரின் கிராமச் சாலைப் பராமரிப்புத் திட்டம்’ என்றே தலைப்புக் கொடுத்திருக்கலாம். அதைத் தவிர்த்து.....

‘பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா என்று பெயரிட்டிருக்கிறான்கள் இந்தி[சமஸ்கிருதம்?] வெறியன்கள். 

அரசியல் சாசனப்படி தேசிய மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ ஆக்கப்படாத இந்தியை அலுவல் மொழி என்று சொல்லிக்கொண்டு நாட்டின் பட்டிதொட்டிகளிலெல்லாம்  பரப்பிக்கொண்டிருக்கிறான்கள்.

இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாதவர்களிடம் போதுமான விழிப்புணர்வு இல்லாததே இவன்களின் அட்டூழியம் தொடர்வதற்கான காரணம் ஆகும்.

இம்மாதிரியான அடாவடித்தனங்கள் தொடர்ந்தால் தமிழ் முதலான திராவிட இனத்து மொழிகள் முற்றிலுமாய் அழிந்தொழியும் என்பது நிச்சயம்.

இந்தி அல்லாத பிற மொழியினர் தங்களின் மொழி காத்திட அதி தீவிரமாகச் செயல்பட வேண்டிய தருணம் இது.

செயல்படுவார்களா?!