எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 22 ஜூன், 2024

அடுக்குமாடிப் பொய்யன் எடப்பாடிப் பழனிசாமி!!!

//கள்ளக்குறிச்சி உயிரிழப்புகள் காரணமாகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது. ‘அதிமுக’ சட்டமன்ற உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார்கள்! 

இந்த வேளையில் சட்டசபைக்கு வெளியே அதிமுக உறுப்பினர்களுக்கும் காவல்துறையினருக்கும்  இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதாவது, எம்எல்ஏக்களைப் போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிச்சாமி, காவல்  அதிகாரிகளை நோக்கி ‛‛ஏய்.. ஏய்'' என்று கூச்சலிட்டு,  ஆள்காட்டி விரலை உயர்த்தி, ‛‛ஏன் எங்களை அடிக்கிறீங்க… பாரு ஆட்சி மாறும்'' என்று கொந்தளித்தார். இதுதொடர்பான காணொலி இணையதளங்களில் வெளியாகிப் பரபரப்பை உண்டுபண்ணியுள்ளது// என்பது ஊடகச் செய்தி.


***அரசியல்வாதிகள் காலால் இடும் கட்டளைகளைத் தலையில் சுமந்து நிறைவேற்றக் கடமைப்பட்டவர்கள்தான் காவல்துறையினர்.

இம்மாதிரியான சூழ்நிலைகளில் அரசியல்வாதிகளைக் காவலர்கள் தாக்கியதற்கான வரலாறு இங்கு இல்லை[ஆங்கிலேயர் ஆட்சியில் நிகழ்ந்திருக்கலாம்].


அடித்து உதைத்து வெளியேற்றுவது வேறு, குண்டுக்கட்டாகத் தூக்கிப்போய் அப்புறப்படுத்துவது வேறு. தூக்கிப்போய் அப்புறப்படுத்தியதற்காக.....


“ஏய்... ஏய்...” என்று கூச்சலிட்டு மிரட்டுவதற்குக் காவல்காரர்கள் என்ன எடப்பாடியைப் போன்ற வடவரின் கொத்தடிமைகளா?


அவர்களை அவமானப்படுத்தியதோடு[கள்ளச் சாராயச் சாவுகளுக்காகத் ‘திமுக’ அரசைக் கண்டித்துக் குரல் எழுப்பியது வரவேற்கத்தக்கதே], அவர்கள் அடிப்பதாகப் பொய் சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பொம்மணாட்டியின் காலில் விழுந்து பதவி பெற்ற இந்தப் பேராண்மையாளன்.


ஒரு வேளை அடித்திருந்தாலும்[வாய்ப்பே இல்லை. இவ்வாறான செய்தி எந்தவொரு ஊடகத்திலும் வெளியாகவில்லை], நான்காண்டுக் காலம் ‘இந்தி’யன்களுக்குச் சேவகம் செய்தார்களே அதைவிடவும் மோசமானதா இந்த அவமானம்?


‘சாபக்கேடு’ என்பார்களே, சாபம் உண்மையோ பொய்யோ, அதனால் விளையும் அத்தனைத் தீங்குகளும் இந்தப் எடப்பாடிகளால் தமிழ்நாட்டிற்கு விளையும் என்பது மட்டும் உண்மை!


* * * * *

https://tamil.oneindia.com/news/chennai/why-you-are-slapping-government-will-change-edppadi-palaniswami-warns-police-who-elminates-admk-ml-615881.html