அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

'அது' விசயத்தில் சராசரியும் அதுக்குக் கீழேயும்.....


கீழ்வருவது, ஒரு புதினத்தில் இடம்பெற்ற வாழ்வியல் உரையாடல். மிகவும் பயனுள்ளது; சுவையானது. படித்துப் பயன்பெறுங்கள்.

....."நான் சராசரியோ அதுக்கும் கீழேயோ, என் பெண்டாட்டி ஒருத்தனோடு ஓடிப்போன அப்புறம் கல்யாணத்தைச் சுத்தமா வெறுத்துட்டேன்அதுல இன்னிக்கி வரைக்கும் எந்தவித மாற்றமும் இல்ல” என்றான் அறிவரசு.

வயசு உனக்கு முப்பதுதான் ஆகுதுவாழ வேண்டி வருசங்கள் நிறைய இருக்குகடந்த காலக் கசப்பான அனுபவங்கள் கொஞ்சம் கொஞ்சமா காலப்போக்கில் மறந்துடும்அப்புறம்பெண்டாட்டி இல்லாம காலம் தள்ளுறதில் பல பிரச்சினைகள் இருக்கும்னு ஏற்கனவே நான் சொல்லியிருக்கேன்முடிவை மாத்திக்கஎன்றான் அறிவரசுவின் நண்பன் சாந்தன்.

"கல்யாணமே இல்லாம காலந்தள்ளுறவங்களும் இருக்காங்க” என்றான் அறிவரசு.

அவங்க எல்லாருமே விரக்தியால அந்த முடிவுக்கு வந்தவங்க அல்லஉடல்நலக் குறைவுயாரும் பெண் தர முன்வராததுன்னு வேறு வேறு காரணங்கள் இருக்கும்இப்படியெல்லாம் மனசைப்போட்டுக் குழப்பிக்க வேண்டாம்” என்றான் சாந்தன்.

அறிவரசு மௌனம் சுமந்திருந்தான்.

அவனின் மாமா குமாரசாமி பேசினார்:

தாலி கட்டினவ ஓடிப்போறதை நினைச்செல்லாம் கவலைப்படுறது பைத்தியக்காரத்தனம்கட்டின பெண்டாட்டியை இழந்தப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறதில் இஷ்டம் இல்லேன்னாஇன்னொருத்தியைச் சேர்த்துகிட்டு வாழுறவங்க நிறையவே இருக்காங்கஇப்படிப்பட்டவங்க எத்தனை பேரு இருக்காங்கன்னு அரசாங்கம் கணக்கெடுப்பு ஏதும் நடத்தலதனியா காலந்தள்ள முடியாதுன்னு ஒருத்தனொடு சேர்ந்து வாழுற பொண்ணுகளும் இருக்காங்க....."

கொஞ்சம் யோசனைக்குப் பிறகு தொடர்ந்தார் குமாரசாமி. "என் வயசுக்காரர் ஒருத்தரோட முதல் பெண்டாட்டிகல்யாணமாகி மூனு மாசத்திலேயே பக்கத்து வீட்டுக்காரனோடு ஓடிப்போனாஅவர் இன்னொரு கல்யாணம் கட்டினார்அவளும் ஆறு மாசத்தில் பால் ஊத்துறவனைக் கூட்டிட்டுக் கம்பி நீட்டிட்டாஅவர் உடைஞ்சி போகலஅப்புறமும் பெண் தேடினார்யாரும் பெண் கொடுக்க முன்வரலமூனாவதா ஒரு விதவையைச் சேர்த்துகிட்டார்..... 

இது நடந்து இருபது வருசம் போல ஆச்சுஇன்னிக்கிவரைக்கும் எந்தவிதமான மனத்தாங்கலும் இல்லாம ரெண்டுபேரும் சந்தோசமா இருக்காங்கமாப்ளஒன்னு புரிஞ்சிக்கோஒரு ஆம்பிளை அது விசயத்தில் பொம்பளையைத் திருப்திபடுத்தணும்னு மனப்பூர்வமா செயல்பட்டாப் போதும்ஒருத்திக்கு அவன் தர்ற சுகம் குறைவானதா இருந்தாலும்வேறொருத்திக்கு அதுவே போதுமானதா இருக்கும். 

=====================================================================================

குறிப்பு:

கடந்த ஆண்டில் வெளியான ஒரு நாவலிலிருந்து 'சுட்ட' பகுதி இது.

"நாவலாசிரியருக்கு 'நன்றி' சொல்லலையா?" -நீங்கள்.

"எனக்கு நானே எப்படிங்க நன்றி சொல்லிக்கிறது?!" -நான் 

ஹி... ஹி... ஹி!!!