வியாழன், 14 அக்டோபர், 2021

வேண்டாம் 'முற்றுப்புள்ளி! 'அது' வேண்டவே வேண்டாம்!!

ருந்துகொண்டிருக்கிற, அணுக்களால் ஆன அனைத்துப் பொருள்களும் அழிந்துகொண்டிருக்க, புதியன தோன்றிக்கொண்டே இருக்கின்றன. கோடானுகோடி உயிர்களின் நிலையும் இதுவே.

இது அறிவியல் கண்டறிந்த உண்மை.

இவற்றின் தோற்றத்திற்கான 'மூலம்' எது?

இன்றளவும் இக்கேள்விக்கான விடையை அறிவியல் ஆய்வுகள் மூலம் கண்டறிய இயலவில்லை.

'தோற்றம்' குறித்த உண்மை இதுவாக இருக்க, 'பொருள்களையும், உயிர்களையும் கடவுள் படைத்தார்; அவற்றை இயக்குபவரும் அவரே. அவர் மட்டுமே மாற்றங்களுக்கும் அழிவுக்கும் உள்ளாகாதவர்; என்றென்றும் இருந்துகொண்டே இருப்பவர்' என்று நம் முன்னோர்களில் சிலர் இந்தக் கேள்விக்கு விடை சொல்லிச்சென்றார்கள்; பலர் இதை நம்பினார்கள்; இன்றளவும் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

இயற்கையிலுள்ள அனைத்துப் பொருள்களும் அழிவையும் மாற்றங்களையும் சந்தித்துக்கொண்டிருக்க, இவற்றிற்கு விதிவிலக்காகக் 'கடவுள்' என்று ஒருவர் மட்டும் அழிவில்லாமல் என்றென்றும் இருந்துகொண்டே இருக்கிறார் என்பது  எவ்வகையிலும் ஏற்கத்தக்கதல்ல; இன்றளவும் நிரூபிக்கப்படாததும்கூட.

இவ்வாறு, இல்லாத ஒருவரை இருப்பதாக நம்பிக்கொண்டு, 'தோற்றம்' குறித்த முற்றுப் பெறாத தொடர் சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகப் பெரிய 'தவறு' ஆகும்.

இந்த முற்றுப்புள்ளி, மனித இனத்தின் அறிவு வளர்ச்சியைத் தடுத்திடும் மிக மிக மிகப் பெரும் தடைக்கல் எனின், அதில் தவறேதும் இல்லை.

==========================================================================