திங்கள், 18 அக்டோபர், 2021

காமத்தில் கலக்கும் போதையும் காணாமல் போகும் ரத்தப்பாசமும்!!!


'போதையில் பெற்ற மகளை வன்புணர்வு செய்த தந்தை கைது.'

'குடித்துவிட்டுப் பெற்ற தாயைப் பலாத்காரம் செய்து அடித்துக் கொன்ற மகனின் வெறிச்செயல்.'

நம்மைக் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் இவ்வாறான செய்திகள் அவ்வப்போது ஊடகங்களில் வெளியாகின்றன. 

நீண்ட நெடுங்காலமாகவே நம் முன்னோர்களிடம் இந்தக் 'குடிப்பழக்கம்' இருந்திருக்கிறது. ஆனால், ஈன்றெடுத்த மகளிடமோ, பெற்றெடுத்த தாயிடமோ தகாத உறவு கொண்டதாக அறியப்படவில்லை.

இந்த ஈனச்செயலில் சில மனித மிருகங்கள் ஈடுபடுவது அண்மைக்கால நிகழ்வுகள்தான்.

இது குறித்த செய்திகளைக் கூர்ந்து நோக்கினால், 'மதுபோதை' தலைக்கேறிய நிலையிலேயே  இதில் இவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதை அறியலாம்.

பல்வேறு குற்றச் செயல்களுக்கான முக்கியக் காரணங்களுள் 'காமம்' குறிப்பிடத்தக்க ஒன்று. எத்தனையெத்தனை உத்திகளையும் உபாயங்களையும் மனிதர்கள் கையாண்டும்கூட, அதை முழுக்க முழுக்கத் தம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இயலாததோடு, அதனோடு தொடர்புடைய குற்றங்களையும் குறைத்திட இயலவில்லை என்பது பெரும் கவலையில் ஆழ்த்தக்கூடியது.

குற்றங்கள் குறையவில்லை என்பதோடு அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு, பொல்லாத காம உணர்வோடு அளவில்லாத போதை சேர்வது காரணமாக உள்ளது.

கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களில் பலரும் குடித்துவிட்டே அவற்றில் ஈடுபடுகிறார்கள் என்பது நம்மைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் உண்மை.

இம்மாதிரியான குற்றங்கள் முற்றிலுமாய்த் தடுக்கப்பட வேண்டியவை எனினும், அது இயலாதபோது சகித்திக்கொள்வது சாத்தியமே. ஆனால்... ஆனால்... ஆனால்...

தாயையும் மகளையும் உடன்பிறப்புகளையும் களங்கப்படுத்தும் குற்றங்கள்[சிறுமிகளை வன்புணர்வு செய்தல் உட்பட்] சகித்துக்கொள்ளவே இயலாதவை.

இது தொடர்பான குற்றங்கள் இன்றளவில் 'அவ்வப்போது' நிகழ்வனவாக உள்ளன. இவை இனி 'எப்போதும் நிகழா' என்னும் நிலையை உருவாக்கத் தவறினால், எதிர்காலத்தில் இவை 'அடிக்கடி' நிகழும் பேராபத்து காத்திருக்கிறது என்பதை மறத்தல் கூடாது. மறந்தால், தாய்ப்பாசம், பெற்ற பிள்ளைப்பாசம் எல்லாம் மறக்கப்பட்டு, காலப்போக்கில் மனிதர்களில் கணிசமானவர்கள் மிருகங்களாக மாறுவார்கள்.

இதைத் தடுத்திட.....

மத்திய மாநில அரசுகள் இணைந்து, குடிப்பழக்கத்தை அடியோடு ஒழித்துக்கட்டுவதற்கான வழிவகைகளைக் கண்டறிவதோடு, அவற்றை நடைமுறைப்படுத்துவது அவசரத் தேவை ஆகும்.

                                                     *  *  *

அண்மைக் காலங்களில் இடம்பெற்ற இவ்வகை நிகழ்வுகளுக்கான ஆதாரங்களின் சிறு பட்டியல்:

***https://www.cafekk.com/national/news/man-who-sexually-assaulted-his-mother-sister-and-sister-in-law-killed-by-his-father  Published on November 20,2019 

'தூத்துக்குடி மாவட்டத்தில் எந்நேரமும் குடிபோதையில் மிதக்கும் கூலித் தொழிலாளி ஒருவர்,  அன்றாடம் குடித்துவிட்டு வீட்டில் சண்டை போடுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.   வீட்டில் மனைவி இல்லாத நேரத்தில் பெற்ற மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்துவந்துள்ளார்.  https://tamil.asianetnews.com/crime/father-arrest-in-pocso-act-regarding-sexual-harassment-own-daughter-q3ood3  -First Published Jan 6, 2020, 5:09 PM IST

***'மகளையே பாலியல் வன்புணர்வு செய்த கொடூர' ...https://www.dailymotion.com › video  -22 மே, 2018

***பெத்த புள்ளய ஒரு 'அப்பன்' செய்ற காரியமா இது?https://tamil.behindwoods.com › india › rajasthan-udaip...

14 ஜூலை, 2020 — 'அதைத் தொடர்ந்து, குடிபோதையில் இருந்த ... பாலியல் வன்புணர்வு செய்துள்ளான்.'

***'மகளைப் பாலியல் வன்கொடுமை செய்த விஏஓ'https://www.toptamilnews.com › crime › cid4962680

20 ஏப்., 2019 — 'இதையடுத்து சரவணன் குடிபோதையில் தனது ... ஏமாற்றி வன்புணர்வு செய்த நபர்கள்?'

***'பெத்த புள்ளய ஒரு அப்பன் செய்ற காரியமா இது?' ...https://www.tamilyugam.in › இந்தியா

15 ஜூலை, 2020 — இந்நிலையில், அந்தப் பெண்ணின் கணவன் குடிபோதையில் மாமனார் வீட்டுக்கு சென்று ...

***சொந்த மகளை வெறித்தனமா கற்பழித்த தந்தை ...https://viralseithigal.com › ...

'கூலித்தொழிலாளி தினமும் குடிபோதையில், தன்னுடைய ... பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.'