பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

‘ராம நவமி’யில் மோடி செய்த மிக மிக மிக நல்ல காரியம்!!!

மிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தச் சிறப்பாகப் பங்காற்றியதற்காக அண்ணாமலைக்குப் பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார். அதில், அண்ணாமலையை வெகுவாகப் பாராட்டியிருக்கிறார்[dailythanthi.com/].

அதன் தொடக்கம் நம்மைப் பெரிதும் கவர்வதாக அமைந்துள்ளது.

தொடக்க வரி,

"எனது சக காரியகர்த்தா அண்ணாமலைக்கு ராம நவமி[ராமனின் பிறந்த நாளைக் கொண்டாடுதல்] திருநாளில் கடிதம் எழுதுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்பதாகும்.


ராம நவமியில் எதைச் செய்யத் தொடங்கினாலும் அது காலமெல்லாம் நல்ல பயனைத் தரும் என்பது இந்த வரியின் உள்ளர்த்தம் ஆகும். அதாவது, மோடி எழுதிய இந்தக் கடிதத்திற்கு நல்ல பலன் விளையும் என்று நம்புகிறார் அவர்.


கடிதம் எழுதுவதற்குக்கூட நல்ல நாள் பார்க்க வேண்டுமா என்று எவரும் மோடியை எள்ளி நகையாடாதீர்.


அது அவர் சுய அனுபவங்களின் மூலம் பெற்ற நம்பிக்கையாகும்.


*கடிதம் வரைவது என்றில்லை, ராம நவமியில், நல்ல நேரம் பார்த்துக்[காலையில்] கழிவறை சென்று காலைக்கடனை நிறைவேற்றினால், நீண்ட காலமாகத் தொல்லை கொடுத்த தீராத ‘மலம் கழித்தல் பிரச்சினை’ தீரும். அப்புறம் நம் ஆயுள் உள்ளவரை மலக் கழிவை வெளியேற்றுவதில் கிஞ்சித்தும் சிரமமே இராது[ஒன்னுக்குப் போவதில் உள்ள தொந்தரவுகளும் அடங்கும்].


*நம் பகையாளியான பக்கத்து வீட்டுக்காரனை, ராம நவமியில், “நீ நாசமாப் போவே” என்று சாபம் கொடுத்தால் அது பலிக்கும்.


*குழந்தைப் பாக்கியம் இல்லாத கணவனும் மனைவியும் அந்த நாளில் உடலுறவு கொண்டால்[பகலோ இரவோ] ஆணோ பெண்ணோ விரும்பிய மகவைப் பெறலாம்.


*ராம நவமி நாளில் திருடப்போகிறவன் திருடு கொடுப்பவர்களிடம் பிடிபடவே மாட்டான்.


*ஆசைக்கு இணங்க மறுத்துப் பல நாட்களாகப் ‘பிகு’ பண்ணிக்கொண்டிருக்கும் குமரிப் பெண், 'ராம நவமி'யில் கண் சிமிட்டினால் போதும் ஓடோடிவந்து படுத்துவிடுவாள்.


ஆக,


ராம நவமியில் மேற்கொள்ளும் செயல்கள் அனைத்துமே நாம் எதிர்பார்க்கும் பலன்களைத் தரும் என்பதில் எள்முனையளவும் சந்தேகத்திற்கு இடமில்லை.


வெல்க மோடி! அண்ணாமலையும் வெல்க!!